Author: yourkattankudy.com
-
ரஷ்யாவின் முக்கிய எதிரணி அரசியல்வாதி சுட்டுக்கொலை!
மொஸ்கோ: ரஷ்யாவில் முக்கிய எதிரணி அரசியல்வாதியும் முன்னாள் துணைப் பிரதமருமான போரிஸ் நேம்ஸோவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். அதிபர் மாளிகை உள்ள கிரெம்ளின் வளாகத்துக்கு அருகே உள்ள பாலம் ஒன்றை போரிஸ் நேம்ஸோவ் கடந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரின் பின்புறத்தில் நான்கு துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளார்.
-
முதலமைச்சரை வரவேற்க ஏறாவூரில் அலையாய் பொங்கியெழுந்த மக்கள் வெள்ளம் (வீடியோ இணைப்பு)
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஏறாவூர்: முதலமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள ஹாபிஸ் நசீர் அஹமட்டை வரவேற்பதற்காக முதலமைச்சரின் சொந்த ஊரான ஏறாவூரில், அரசியல் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு மக்கள் அலையாய் திரண்டெழுந்து முதலமைச்சரை வரவேற்றமையானது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஏராவூர் மக்களின் ஒற்றுமை எனும் அரசியல் கலாச்சாரத்தை வெள்ளிச்சம் போட்டுக்காட்டும் முக்கிய செய்தியாகவே பலராலும் பார்க்கப்பட்டது.
-
சமாதான நீதவானாக வஜூறுதீன் முகம்மது ரஅசி நியமனம்
ரைஸ் கிண்ணியா: கிண்ணியாவைச் சேர்ந்த வஜூறுதீன் முகம்மது ரஅசி சமாதான நீதவானாக திருகோணமலை மாவட்ட மேன் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதவான் கௌரவ T. J. பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
-
மொய்ன்கான் மீது முட்டை வீச முயற்சி: கராச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
கராச்சி: உலக கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா, மேற்கிந்திய அணிகளிடம் தோற்றது. இதனால் அந்த அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியுடன் தங்கி இருந்த தேர்வு குழு தலைவரான முன்னாள் வீரர் மொய்ன்கான் சூதாட்ட விடுதிக்கு சென்றதால் சர்ச்சையில் சிக்கினார். அவர் நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உத்தர விட்டது.
-
மகாராணியின் அழைப்பில் ஜனாதிபதி லண்டன் பயணம்
கொழும்பு: எலிசபெத் மகாராணியின் விசேட அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் 7ம் திகதி லண்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
-
21 வருடங்களின் பின்னர் பச்சை நிறமாக மாறிய ஓட்டமாவடி பிரதேச சபை!!
– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் ஓட்டமாவடி: மர்ஹும் முன்னால் பிரதி அமைச்சர் மொஹைதீன் அப்துல் காதர் 1994ம் அண்டு ஓட்டமாவடி பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு சபையின் தவிசாளரக பதவி வகித்தற்குப் பிற்பாடு தொடர்ந் தேர்ச்சியாக பொதுசன ஐக்கிய முன்னணியின் நீல நிற ஆட்சியில் இருந்து வந்த ஓட்டமாவடி பிரதேச சபையானது,
-
மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மின்சாரமற்ற அனைவருக்கும் மின்சாரத்தை வழங்கும் அரசின் திட்டத்தின் கீழ் மன்னார் பெரியகரிசலுக்கான மின் விநியோகத்தை கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று ஆரம்பித்து வைத்தார்.
-
பொறியியலாளர் அப்துர் ரஹ்மானின் தலைமையில் நடைபெற்ற LLM கற்கைநெறி அங்குரார்ப்பணம்
– ஏ.ஜி.எம். பளீல் கொழும்பு: வழக்குரைஞர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட LLM- சட்ட முதுமானி பட்டப்படிப்பு அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது. இலங்கையில் முதன்முறையாக BCAS Campus யினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இந்த விசேட LLM பாட நெறி அங்குரார்ப்பண நிகழ்வு அதன் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தலைமையில் கடந்த 26.02.2015 அன்று கொழும்பில் நடைபெற்றது.
-
முசலி: வெளிமலை முன்பள்ளி பாடசாலை அமைச்சர் றிஷாட் திறந்துவைப்பு
– இர்ஷாட் ரஹ்மதுல்லா முசலி: முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முசலி பிரதேசத்தில் வெளிமலை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி பாடசலையினை இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் திறந்து வைத்தார்.
-
அரசியல் பிரமுகர்களுக்காக நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் மையம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை
கொழும்பு: இலங்கை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் மையம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இந்த பாலியல் தொழில் மையம் அத்துருகிரிய பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளது.
-
பொதுத் தேர்தலில் போட்டியிட மகிந்தவுக்கு வாய்ப்பில்லை
கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில கூட்டணிக் கட்சிகள் எப்படியான முயற்சிகளில் ஈடுபட்டாலும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள சிரேஷ்ட தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை கடுமையாக எதிர்க்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக அந்த கட்சியின் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
“மீள்குடியேற்றம் பூஜ்யத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது”: அமைச்சர் றிஷாட்
– இர்ஷாட் ரஹ்மதுல்லா முசலி: எமது மக்கள் அதிகமான தேவையுள்ளவர்களாக இருக்கின்றனர்.இவ்வாறானதொரு நிலையிலும் தமது பிள்ளைகளுக்கு தங்கு தடையின்றி கல்வியினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள பொற்கேணியில் தெரிவித்தார்.