Author: yourkattankudy.com
-
குருனாகலில் ஒன்று கூடிய கல்குடா நண்பர்கள் வட்டம்
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் குருனாகல்: கல்குடாவில் இருக்கின்ற நண்பர்கள் வட்டத்துக்கெல்லாம் முன்மாதிரியான முறையில் தனது திட்டங்களை தூர நோக்கடிப்படையில் எதிர்காலத்தில் வெற்றியடையும் கருப்பொருளோடு சமூகத்தில் முக்கிய பங்காற்றிவரும் கல்குடாவின் 1992ம் ஆண்டு கல்குடா நண்பர்கள் வட்டத்தின் 12ஆவது பொதுக்கூட்டமும் ஆண்டரிக்கை சம்பந்தமான ஒன்று கூடலும் ஞாயிற்றுக் கிழமை (01.02.2015) குருனாகலில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இராஜாங்க சுகாதார அமைச்சர் ஹசன் அலி விஜயம்
– டீன் பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இராஜாங்க சுகாதார அமைச்சர் ஹசன் அலி (பா.உ) அவர்களின் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விசேட குழுவொன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 25.02.2015ம் திகதி (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு வருகை தரவிருந்தது.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சகோதரர் ULMN முபீன் அவர்களுக்கு ஒரு கடிதம்
அன்புள்ள முபீன் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சென்ற 24 02 2015ம் திகதியன்று இரவு தங்களால் காத்தான்குடியில் கூட்டப்பட்ட கட்சிப் புணரமைப்பும், அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மிக உணர்ச்சி வசப்பட்டும், மிகவும் ஆவேசமாகவும் ஆக்குரோசமாகவும் சில கருத்துக்களை கூறியிருந்தீர்கள்.
-
‘தவறுகளை ஏற்றுக் கொள்ளுகின்ற தலைமைத்துவமே சமூகத்திற்கு பாதுகாப்பானது’: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
பழீல் ஏ கபூர் பண்டாரகம: ‘தலைமைத்துவப் பொறுப்பிலுள்ளவர்களும் மனிதர்களே என்றவகையில் தவறுகள் ஏற்பட முடியும். ஆனால், அந்தத்தவறுகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பாடம் படித்து அவற்றைத் திருத்திக் கொள்ள தலைவர்கள் முன்வர வேண்டும். அப்படியான தலைமைத்துவமே சமூகத்திற்குப் பிரயோசனமான, பாதுகாப்பான தலைமைத்துவமாகும்.’ எனபொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
காத்தான்குடி தள வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியாக Dr. S.M.B.M. றூமி நியமனம்
நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு எமது காத்தான்குடியைச் சேர்ந்த Dr. S.M.B.M. றூமி அவர்கள் மாவட்ட வைத்திய அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு இன்று காலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
சுவிஸ் நாட்டு தூதுவர் றிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு
இர்சாத் ரஹ்மதுல்லா கொழும்பு: இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பொன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் (EDB) இன்று 02/03/2015 நடைபெற்றது.
-
ஸனாஇய்யாவில் வாராந்த இஸ்லாமிய வகுப்புக்கள்
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி)
-
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களும் முஸ்லிம் அரசியல் குழுக்களும்
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் காத்தான்குடி: இலங்கையில் பல முஸ்லிம் கட்சிகள் அரசியல் குழுக்கள் இருக்கின்றன. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அதிலிருந்து பிறந்த தேசிய காங்கிரஸ் (அதாவுல்லாஹ் அணி), மக்கள் காங்கிரஸ் (ரிஷாத் அணி), தேசிய ஐக்கிய முன்னணி (பேரியல் அணி) இவர்கள் பாராளுமன்றம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளனர்.
-
பானகமுவவவில் இடம் பெற்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் கூட்டம்
இர்சாத் ரஹ்மதுல்லாஹ் குருநாகல்: குருநாகல் மாவட்டத்தில் கடந்த 15 வருடகாலமாக ஒரு சிறுபான்மை சமூகத்திற்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கான காரணங்கள் தொடர்பில் இப்பிரதேச தமிழ் பேசும் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென வேண்டுகோள்விடுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை கொண்டு உங்களால் ஏன் இதனை அடைந்து கொள்ள முடியாதுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
-
ஹமாஸ் அமைப்பை தீவிரவாத பட்டியலில் சேர்த்தது எகிப்து நீதிமன்றம்
கெய்ரோ: பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை தீவிரவாதக் குழுவாக எகிப்து நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. வடக்கு சினாயில் ஆயுதக் குழுக்களுக்கு உதவுவதாக குற்றம் சாட்டியே கடந்த சனிக்கிழமை கெய்ரோ நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
-
இலங்கை அணியை கிண்டல் செய்த ஐ.சி.சி.
வெலிங்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித்தலைவர் மத்தியுஸின் தவறான மேன் முறையீட்டைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் இலங்கை அணியை கிண்டல் செய்துள்ளது. நியுசிலாந்தின் வெலிங்டன் நகரில் நேற்று நடந்த போட்டியின் 39ஆவது ஓவரில் ஜோ ரூட்டுக்கு சுரங்க லக்மால் பந்து வீசினார்.