கொழும்பு: இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பொன்று ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் (EDB) இன்று 02/03/2015 நடைபெற்றது.
இதில் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள், பொருளாதார விடயங்கள் அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதுடன் வட மாகான முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அத்தியாவசிய உதவிகள் மற்றும் சிறார்களுக்கான கல்வி போன்றவைகளையும் அமைச்சர் விளக்கினார். இதில் EDB தலைவர் மற்றும் வர்த்தக பிரிவு தலைவரும் கலந்துகொன்டனர்.
Published by



Leave a comment