Author: yourkattankudy.com
-
மாவடிவேம்பில் வேன் மோதியதில் பாடசாலை மாணவி மரணம்: வேன் தீக்கிரை
ஓட்டமவடி அஹமட் இர்ஸாட் ஏறாவூர்: மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமான மாவடிவேம்பு எனுமிடத்தில் அக்கறைப்பற்றிலிருந்து குருணாகல் நோக்கி சென்று கொண்டிருந்த வேன் துவிச்சக்கர வண்டியுடன் பாதையை கடக்க முட்பட்ட 14 வயது மதிக்கதக்க பாடசலை மாணவியுடன் மோதியதால் மாணவி பரிதாபகரமாக ஸ்தலத்திலேயே மரணமானார்.
-
சூடுவேந்தபுளவு கிராம மக்களின் தேவைகள் தொடர்புகள் ஆராயும் வகையில் றிசாத் பதியுதீன் விஜயம்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: வவுனியா மாவட்டத்தின் சூடுவேந்தபுளவு கிராம மக்களின் தேவைகள் தொடர்புகள் ஆராயும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் விஜயமொன்றினை மேற்கொண்டார்.
-
லண்டன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்! பின் கதவால் சென்ற ஜனாதிபதி மைத்திரி!!
லண்டன்: இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த போது, அவருக்கு எதிராக சிறியளவிலான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு மைத்திரிபாலவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
-
ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார் சங்கக்கார
சிட்னி: சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை இலங்கையின் நட்சத்திர வீரர் குமார சங்கக்கார பெற்றுள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் 14 ரன்களைக் கடந்த உலகின் ஒரே வீரராக இருந்துவந்தவர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.
-
அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி தலைமையிலான குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு விஜயம்: சிப்லி பாரூக் கலந்துகொண்டார்
– எம்.எஸ்.எம். ஸப்றாஸ் ஏறாவூர்: சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்கொண்ட விஜயத்தின் போது ஏறாவூர் தள வைத்தியசாலைக்கும் இன்றைய தினம் வருகைதந்தார். இந்த விஜயத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, சிப்லி பாறுக், மற்றும் துரைரெட்ணம், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
-
பாராளுமன்றத் தேர்தலுக்கான NFGGயின் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் உள்ளக வாக்கெடுப்புக்கள் ஆரம்பம்
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் NFGGயின் பங்குபற்றுதல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (07.03.2015) காத்தான்குடியில் இடம்பெற்றது.
-
பாடசாலைகளுக்குள் தனிப்பட்ட அரசியல் ரீதியான செயற்பாடுகளை எவரும் முன்னெடுக்க வேண்டாம்: அமைச்சர் றிசாத் பதியுதீன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: சமூகத்தின் எதிர்கால சந்ததிகளை கற்றவர்களாக உருவாக்கும் பாடசாலைகளுக்குள் தனிப்பட்ட அரசியல் ரீதியான செயற்பாடுகளை எவரும் முன்னெடுக்க வேண்டாம் என வேண்டுகோள்விடுத்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தற்போதைய வடமாகாண சபை இல்லாத காலத்திலும் எமது பணிகள் சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்தது எஎன்றும் கூறினார்.
-
வவுனியா மாவட்ட பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று இன்று (2015.03.08) வவுனியா பட்டானிச்சூர் தேசிய பாடசலையில் இடம் பெற்றது.
-
யாழ் முஸ்லிம்களின் வரலாற்று நுால் வெளியீட்டு விழாவுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும். இன்று இடம் பெறும் இந்த நுால் வெளியீட்டு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த போதும், தவிர்க்க முடியாதத காரணம் காரணமாக வருகைத்தர முடியாமையினையிட்டு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரஃப் வித்தியாலயத்தின் முதலாவது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டி வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
-
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம்
சிட்னி: உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 32 வது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. இன்னும் சற்று நேரத்தில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.
-
‘எனது முறைப்பாட்டை உடன் விசாரித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கவும்’: அமைச்சர் றிஷாட்
கொழும்பு: எனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டை உடனடியாக விசாரணை செய்து முடிவை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆணைக்குழு தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.