Author: yourkattankudy.com
-
கடினபந்து பயிற்சி கூடம், கரப்பந்தாட்ட மைதான நிர்மாணப் பணிகள் மும்முரம்!
செயிட் ஆஷிப் சாய்ந்தமருது: இளைஞர் சேவைகள் மன்றத்தின் “சிரம சக்தி” திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்தில் கரப்பந்தாட்ட மைதானம் மற்றும் கடின பந்து கிரிக்கட் பயிற்சி கூடம் என்பவற்றை அமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தில் கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்சாத்தினால் அண்மையில் அடிக்கல் நடப்பட்டு, நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
காத்தான்குடி ஒஸா அமைப்பினது ஐந்தாவது ஆண்டு பூர்த்தி விழா
காத்தான்குடி: காத்தான்குடி ஒஸா அமைப்பினது ஐந்தாவது ஆண்டு பூர்த்தி விழா கடந்த 24.12.2015 பி.ப 4.00 மணியளவில் ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் அமைப்பினது தலைவரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்க மாகாண முதலமைச்சர் கௌரவ அல்ஹாபிழ் நஸீர் அஹமட் அவர்களும் முதன்மை அதிதியாக BCAS கல்வி நிறுவனத்தின் முதல்வர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
-
சம்மாந்துறை வேன் விபத்து; குழந்தை உட்பட ஐவர் பலி
வரக்காபொலை: சம்மாந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த வேன் ஒன்று, பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று (30) அதிகாலை வரக்காபொலை, தும்மல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தை மற்றும் 3 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
காத்தான்குடியில் “இரத்ததானம் வழங்குவோர்களின் சமூகம்” உதயம்
காத்தான்குடி: இரத்ததானம் வழங்குவதில் கிழக்கு மாகாணத்திலே முன்னணியில் திகழும் ஊர் காத்தான்குடி. இது அதிகமான இரத்ததானம் வழங்குவோரும் அதனை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளையும் கொண்ட ஊராகும் . காத்தான்குடியில் இருந்து 1500க்கும் அதிகமானோர் வருடாவருடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்துவருகின்றனர்.
-
அமைச்சர் றிசாத்- ஆனந்த தேரர் விவாதத்தை விமர்சிப்பவர்களுக்கு
அபூ சுஹா கொழும்பு: நேற்று இரவு ஹிரு தொலைக்காட்சியில் வில்பத்துவில் முஸ்லிம் குடியேற்றம் என்னும் தலைப்பில் இடம் பெற்ற விவாதம் தொடர்பில் பல்வேறுபட்ட எதிரும்,புதிருமான கருத்துக்களை தற்போது காணமுடிகின்றது. உண்மையிலேயே இந்த வில்பத்து பிரச்சினையின் உருவாக்கத்தின் பின்னணியில் யார் இருக்கின்றார்களை என்பதை இந்த நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.இந்த பிரச்சினை வெளிவந்த போது அதனை அடக்குவதற்கு ஒரு தைரியமான தலைமைத்துவம் தேவைப்பட்டது.
-
உறுதிமொழியையும் பொருட்படுத்தாது பேரணி நடத்தியது பெருங்கவலை, சமூகங்களைத் தூண்டிவிட சிலர் சதி – பிரதி அமைச்சர் ஹரீஸ் விசனம்
ஹாசிப் யாஸீன் கல்முனை: நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய வாக்குறுதி, உறுதிமொழிகளை கவனத்தில் கொள்ளாமல் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தை எதிர்த்து சில அரசியல் சக்திகள் கல்முனை வாழ் தமிழ் சமூகத்தை தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை பெரும் கவலை அளிப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் விசனம் தெரிவித்துள்ளார்.
-
கொழும்பில் சிறப்பாக நடந்த ஹீலர் பாஸ்கரின் செவி வழி தொடுகை சிகிச்சை பயிற்சி முகாம்!
கொழும்பு: இலங்கை வந்து உள்ள உலக பிரசித்தி வாய்ந்த செவி வழி தொடுகை சிகிச்சை நிபுணர் ஹீலர் பாஸ்கர் கடந்த வாரம் கொழும்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தினார். பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற இச்சிகிச்சை முகாமில் நூற்றுக் கணக்கான நோயாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
-
ஜேர்மனியின் மனித நேயம்
பேர்லின்: ஜேர்மனியில் அகதிக்குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக உலக அளவில் 8,500 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். போர் மற்றும் வறுமை காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த 196,000 அகதிக் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 8,264 சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
-
“போதைப் பொருளுக்கு எதிரான தூதர் பதவியில் இருந்து குமார் சங்கக்கார பதவி விலக வேண்டும்”
AF-90 கொழும்பு: போதைப் பொருளுக்கு எதிரான தூதர் பதவியில் இருந்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார பதவி விலக வேண்டும் என்று போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு அரசாங்க சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான தூதர் பதவி வழங்கப்பட்டது.
-
நாவலடி, புனானையில் சட்டவிரோத காணிப்பிடிப்பு சம்பந்தமான குற்றச்சாட்டுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலியின் பதிலடி- காணொளி
மட்டக்களப்பு: வாழைச்சேனை நாவலடி, வாகனேரி ,புனானை ஆகிய பிரதேசங்களில் வனபரிபாலன தினைக்களத்திற்குச் சோந்தமான அரச காணிகளை அத்துமீறிய பொது மக்கள் தம்மகப்படுத்துவது தொடர்பில் மட்டகளப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் சிலர் ஜனாதிபதிக்கு அணிலை விட்டு மாம்பழம் ஆய்கின்ற வேலையைச் செய்கின்றார்கள் என கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். குறிப்பிட்ட சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலே இவர் இதனைத் தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
-
கலப்பு தேர்தல் ஜூன் மாதத்தில்
கொழும்பு: உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கலப்பு தேர்தல் முறை மூலம் எதிர்வரும் ஜூன் மாத முதல் வாரமளவில் இடம்பெறும் என, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இடம்பெற இருப்பதாக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
-
கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்ட ஆமீர்: கட்டித்தழுவி ஆறுதல் கூறிய பாகிஸ்தான் வீரர்கள்
லாஹூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர், சூதாட்ட புகாரில் சிக்கி தடை பெற்றவர்.கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆமீர், ஆசிப், சல்மான் பட் ஆகியோருக்கு ஐந்தாண்டு போட்டித் தடையும், 6 முதல் 30 மாதம் வரை சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. தற்போது ஆமீர் தடை முடிந்து முதல்தர போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் 26 நபர் கொண்ட பாகிஸ்தான் அணியில் ஆமீரின்…