Author: yourkattankudy.com
-
கடத்தப்பட்ட இளைஞன் ஹிருணிகாவிடமே அழைத்துச் செல்லப்பட்டார்
கொழும்பு: தெமட்டகொட பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நபர், கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிடமே அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.ஐந்தாவது சந்தேக நபரின் மகளின் வாக்குமூலத்திற்கமைய இது நிரூபணமாவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
இந்தியாவில் ஃபேஸ்புக் இலவச சேவையும் எழுந்துள்ள சர்ச்சையும்
டெல்லி: இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனம் தர விரும்பும் மட்டுப்படுத்தப்பட்ட இலவச இணைய சேவை பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.இதுவரை இணைய வசதியே இல்லாத அல்லது இணையத்தையே பயன்படுத்தாத செல்பேசி பயன்பாட்டாளர்களுக்கு இலவசமாக இணைய சேவையை தருவதே தமது முக்கிய நோக்கம் என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகிறது.
-
துபாய் அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டலில் தீ
துபாய்: துபாயில் நகர மத்தியில் உள்ள வானுயர் மாடிக் கட்டடம் ஒன்றில் தீ பிடித்துள்ளது.புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை ஒட்டி வாணவேடிக்கை நடக்க இருந்த இடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் உள்ளது. அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டல் என்ற இந்த 63 -மாடிக் கட்டடம், உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவுக்கு அருகே உள்ளது.
-
இரத்ததானம் வழங்கள்
அன்புப் பொதுமக்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். எமது MSW அமைப்பினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று இன்ஸாஅல்லாஹ் எதிர்வரும் 03/01/2016 அதாவது வருகின்ற ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி மெத்தைபள்ளி வித்தியாலயத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
-
ஆனந்த தேரருடன் கொழும்பில் மூடிய அறைக்குள் பேச்சு நடத்திய முஸ்லிம் அரசியல்வாதிகள் யார்?
இப்னு மலீக் கொழும்பு: வில்பத்து விவகாரம் தொடர்பில் ஆனந்த தேரருக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்குமிடையிலான விவாதம் இன்று நாடுபூராகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. சமுக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்கள் என்பனவற்றிலெல்லாம் அந்த விவாதம் குறித்த எதிரும் புதிருமான கருத்துக்களே மேலோங்கி வருகின்றன.
-
தமிழ்க் கூட்டமைப்பு – மு.கா சந்திப்பு
கொழும்பு: உத்தேச புதிய அரசியலமைப்பு, உத்தேச தேர்தல் சீர்திருத்தங்கள் என்பன தொடர்பில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம், இருப்பு, பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நிலைப்பாடு பற்றிய கருத்தொருமைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையில் முக்கியமான கலந்துரையாடலொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
-
“எல்நின்யோ காலநிலையின் தாக்கத்தால் 2016இல் பசியும் நோயும் ஏற்படும்”
லண்டன்: எல்நின்யோ காலநிலை சுற்று கடுமையாவதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாகியிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.இந்த விநோதமான காலநிலை சில இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அதேநேரம், வேறு சில இடங்களில் பெரும் வறட்சியை ஏற்படுத்தும்.
-
தடைப் பட்டியலில் சங்கா, மஹேலவின் நிறுவனம்
கொழும்பு: ‘லைவ் இவன்ற்ஸ் ஶ்ரீ லங்கா’ நிறுவனத்தை தடைப் பட்டியலில் (Black List) இணைப்பதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற இலத்தீன் மொழி பாடகரான, ஸ்பானிய நாட்டின் என்றிக் இக்லிசியஸின் சர்ச்சைக்குரிய இசை நிகழ்ச்சிக்கான பொழுதுபோக்கு வரியை செலுத்தாமை தொடர்பிலேயே குறித்த நிறுவனத்தை தடைசெய்துள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
-
எங்க ஊரு வாங்க
இறங்காமல் பறக்கும் எயார் லைன்ஸைப் பார்க்க எங்க ஊரு வாங்க. இறந்த பின்னும் கேட்குமாம் ஏழெட்டு சியாரங்கள் பறந்து வாங்க பார்க்க.