Author: yourkattankudy.com
-
100 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்தது நாசாவின் கெப்ளர் விண்கலம்!
நியூயோர்க்: விண்வெளியில் 100க்கும் மேற்பட்ட புதிய கிரகங்களை நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. முன்பு கண்டுபிடிக்கப்பட்டதை விட இப்போது இவற்றில் பல வித்தியாசமாக தோன்றுவதையும் கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது. தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்களின்படி இவற்றில் பல கிரகங்களின் சூரியன்கள் மிக மிக பிரகாசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. முன்பு கணித்ததை விட மிக சூடாகவும் இவை உள்ளன. 3 கிரகங்கள் நமது பூமியை விட மிகப் பெரியதாக உள்ளன.
-
உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்
லண்டன்: உலகளவில் அதிகம் நீலப்படம் பார்பவர்களில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என ஆய்வு முடிவொன்று கூறுகிறது.போர்ண் ஹப் எனும் இணையதளம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின் படி மிக அதிகப்படியாக நீலப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்காவும் அடுத்த இடத்தில் பிரிட்டனும் உள்ளன.
-
அமைச்சர் ரிசாட் – கட்சியின் செயலாளர் வை எல் எஸ் ஹமீட் குற்றச்சாட்டு
கொழும்பு: தற்போது இலங்கை சிறுபான்மை அரசியலில் ஒரு புதிய கலாச்சார வம்சம் தோன்றியுள்ளது. அந்த வம்சத்தை ‘நக்குண்டார் நாவிழந்தார்’ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என செல்லமாக அழைக்கின்றார்கள். அந்த புதிய கலாச்சார வம்சத்தை தோற்றுவித்த பெருமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் அவர்களையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
NFGG நடாத்திய விசேட மக்கள் சந்திப்பு
NFGG காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பும் ஆதரவாளர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்வும் 09.01.16 சனிக்கிழமை NFGGயின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தில் இடம் பெற்றது. NFGGயின் கிழக்குப்பிராந்திய செயலாளர் MACM.ஜவாஹிர் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியளாளர் MM அப்துர்ரஹ்மான், அதன் பொதுச்செயலாளர் முஹம்மட் நஜா, தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் தலைமைத்துவ சபை உறப்பினர்களான
-
ஜனாதிபதிக்கு 3,200 முறைப்பாடுகள்
கொழும்பு: பொதுமக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக சமர்ப்பிக்க முடியுமான ”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” எனும் நேற்று முன்தினம் (08) ஆரம்பிக்கப்பட்ட முறைப்பாடு தெரிவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் 3,200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க ஊடகநிலையம் அறிவித்துள்ளது.
-
முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலில் விஷேட துஆ பிரார்த்தனை
எம் எச் எம் அன்வர் காத்தான்குடி: நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நாடு பூராகவும் சமய அனுஸ்டானங்களும் விஷேட நிகழ்வுகளும் இடம்பெற்றன இந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜூம்ஆப்பள்ளிவாயலில் விஷேட துஆ பிரார்த்தனையும் மர நடுகை நிகழ்வும் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.
-
ராஜபக்ஷக்களை அரசியலிலிருந்து நீக்கமுடியாது
கொழும்பு: ஐ.தே.கவுக்கோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ ராஜபக்ஷக்களை அரசியலிலிருந்து நீக்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஷியாவுக்கு எதிரான பிரகடனம்
தொகுப்பு :எம்.ரீ.எம்.பாரிஸ் மீராவோடை: ஓட்டமாவடி பிரதேசத்தின் மீராவோடை கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மன்பஊல் ஹூதா அறபு கல்லூரி ஷீஆக்கொள்கையினை பகிரங்கமாக பிரச்சாரம் செய்து வருவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கல்குடா கிளையும்,பிரதேச பள்ளிவாயல் நிருவாகத்தினரும் குறிப்பாக மீராவோடை கிராமத்தின் மீரா ஜூம்ஆப்பள்ளிவாயல் நிருவாகமும் குற்றம் சுமர்த்தி அதனை நிரூபித்துள்ளது.
-
‘வேறு இரத்தமுள்ளவர்கள் என்னை சந்திக்கவும்’
கல்முனை: மனிதனாப் பிறந்த ஒவ்வொருவரினதும் உடலிலும் ஓடுகின்ற இரத்தமும் ஒரே இரத்தமாகும். அதன் நிறமும் சிவப்பாகும். இதுதவிர இந்நாட்டில் வேறு இரத்தம் உள்ளவர்கள் உடனடியாக என்னை சந்திக்கவும் என கல்முனை ரன்முத்துகல விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல தேரர் தெரிவித்தார்.வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற (08) மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
-
ஈரான் மன்னர் ஷாவின் சகோதரி ”பிளக் பந்தர்” காலமானார்
தெஹ்ரான்: ஈரானின் கடைசி மன்னரான ஷாவின் இரட்டைச் சகோதரி தனது 96 வது வயதில் காலமானார்.1979இல் இஸ்லாமிய புரட்சியின்போது பதவியில் இருந்து வீழ்த்தப்பட்ட மன்னர் ஷா மொஹமட் ரெஷா பஃலவியின் இரட்டைச் சகோதரியான இளவரசி அஷ்ரப் பஃலவி மாத்திரந்தான் மன்னரின் சகோதரங்களில் இதுவரை உயிர் வாழ்ந்தவராவார்.