ஈரான் மன்னர் ஷாவின் சகோதரி ”பிளக் பந்தர்” காலமானார்

pahlavi- iranதெஹ்ரான்: ஈரானின் கடைசி மன்னரான ஷாவின் இரட்டைச் சகோதரி தனது 96 வது வயதில் காலமானார்.1979இல் இஸ்லாமிய புரட்சியின்போது பதவியில் இருந்து வீழ்த்தப்பட்ட மன்னர் ஷா மொஹமட் ரெஷா பஃலவியின் இரட்டைச் சகோதரியான இளவரசி அஷ்ரப் பஃலவி மாத்திரந்தான் மன்னரின் சகோதரங்களில் இதுவரை உயிர் வாழ்ந்தவராவார்.

அவரது நம்பகத்தன்மை குறித்து பல விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த போதிலும், தனது சகோதரனின் கொள்கைக்கு இறுதி வரை பக்கபலமாக இருந்து வந்த இளவரசியார், பெண்களின் உரிமைகள் குறித்த போராளிகாயகவும் திகழ்ந்தார்.

pahlavi iran

மன்னரின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின்னர் பாரிஸ், நியூயார் மற்றும் பிரஞ்சு ரிவிரா ஆகிய இடங்களுக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த இளவரசியார், அங்குள்ள சூதாட்ட விடுதிகளுக்கும் அடிக்கடி பயணிப்பவராக இருந்தார். கொஞ்சக்க்காலம் அரசியலில் மிகுந்த நாட்டம் உள்ளவராக இருந்த இவரை பிரஞ்சு ஊடகங்கள் ”பிளக் பந்தர்” என்ற புனைபெயரில் அழைத்துவந்தன.

Published by

Leave a comment