Author: yourkattankudy.com
-
காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் சான்றிதல் வழங்கும் நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் கூடுதலான இளைஞர்களை கொண்ட காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் 21.04.2013 நேற்று காத்தான்குடி அந்-நாஸர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
-
இஸ்லாத்தில் இது ஒன்றும் இல்ல..
-மதியன்பன் கல்முனை கடற்கரைப் பள்ளி – அதன் கன்றாவித் தனங்களைச் சொல்லி கவிதைகள் பாடுவேன் புள்ள – நீயும் காதினை நீட்டுவாய் மெல்ல..
-
ஊர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவருக்கு வழி கொடுத்த வேன் மின் கம்பத்தில் மோதி விபத்து
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பழைய கல்முனை ஊர் வீதியில் காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயத்திற்கு அருகாமையில் வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை சற்று நேரத்துக்கு முன்னர் மின்சார சபையின் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
-
இருமல் மருந்து வகைகளின் பாவனையில் புதிய கட்டுப்பாடுகள்
கொழும்பு: இலங்கையில் இருமலுக்கு பயன் படுத்தப்படும் மருந்து வகைகளின் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கோடைன் (Codeine) டெக்ஸ்ட்ரோ மெத்தோர் பான் (Dextromethorphan) போலோடைன் (Pholoodeine), டிஹைட்ரோ கோடையின் (Dihydro Codeine) ஆகிய இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கியுள்ள மாத்திரைகளினதும், பாணி மருந்துகளதும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கே சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து இருக்கின்றது.
-
மாணவர்களை புத்திஜீவிகளாக உருவாக்குவதை விட முதலில் சிறந்த ஒரு நல்ஒழுக்கமுள்ள பிரஜையாக உருவாக்குங்கள்- மட்டு -அரச அதிபர் பி.எஸ்.எம.சார்ல்ஸ்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மாணவர்களை சிறந்த ஒரு நல்ஒழுக்கமுள்ள பிரஜையாக உருவாக்குங்கள்.அதன் பின்னர்தான் புத்திஜீவிகளாக உருவாக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார்.
-
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு வைபவம் காத்தான்குடியில்
வெற்றிபெற்றோர்களின் விபரங்களுடன்.. – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய ரீதியிலான காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற அல்குர்ஆன் மனனம், கிராஅத் போட்டிகளில் முதல் 10 இடங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஸமீல் (நளீமி) தலைமையில் இன்று பிற்பகல் 04.30 மணியளவில் இடம்பெற்றது.
-
ஆசியாவின் முதலாவது பிரதான வீதியின் பொது மக்கள் தொடர்பாடல் ஒலிபெருக்கிக் கட்டமைப்பு காத்தான்குடியில் திறந்துவைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் கீழ் ஆசியாவின் முதலாவது பிரதான வீதியின் பொது மக்கள் தொடர்பாடல் ஒலிபெருக்கிக் கட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான நெடுஞ்சாலையில் திறந்துவைக்கப்பட்டது.
-
மட்டு மாவட்டத்திற்கு நாள்தோறும் அல்லது கிழமை தோறும் அமைச்சர்களை கொண்டு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம் – பிரதியமைச்சர் வி. முரளிதரன்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாள்தோறும் அல்லது கிழமை தோறும் அமைச்சர்களை கொண்டு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை செய்வதற்கு தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம்
-
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொலைநிலைக்கல்வி பட்டப்படிப்புக்கான பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன
பழுளுல்லாஹ் பர்ஹான் மதுரை காமராசர் பல்கலைகழக தொலைநிலை கல்வி பட்டப்படிப்புக்கான கடந்த வருடம் நவம்பர் 2012ம் ஆண்டு இடம்பெற்ற சகல வருட மாணவர்களுக்குமான பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
-
காங்கேயனோடை அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று இடம்பெற்றது
பழுளுல்லாஹ் பர்ஹான் காங்கேயனோடை: மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் காங்கேயனோடை பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார
-
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாண சபைத் தேர்தல்
கொழும்பு: வடமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் தேர்தலை நடத்துவதற்கான வெற்றிகரமான சுபவேளையை நிர்ணயிக்கும் செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார். வெலிஓயா பிரதேச மக்களுக்கு மஹாவலி காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் இது பற்றி தெரிவித்த ஜனாதிபதி மக்களின் மகிழ்ச்சியே தமது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
-
நிவாரண பணிகளில் கூட்டிணைந்து செயற்பட முஸ்லிம் எய்ட், அட்ரா உடன்படிக்கை
– பஹ்மியூஸூப் கொழும்பு: கடந்த பல வருடங்களாக இலங்கையில் நிவாரணம் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற இரண்டு பிரதான சர்வதேச அமைப்புகளான முஸ்லிம் எய்ட் மற்றும் அட்ரா இன்ரநேசனல், 2013 ஏப்ரல் மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன. இந்நிகழ்வு இலங்கையின் நீண்ட நிவாரண மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரு வரலாற்று மைல் கல்லாகும்.