Author: yourkattankudy.com
-
கிழக்கு மாகாணசபை எந்நேரத்திலும் கலைக்கப்படலாம்!
கொழும்பு: கிழக்கு மாகாண சபையை கலைப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இரகசிய கூட்டமொன்றில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
பிரிட்டிஷ் அரச குடும்ப புதிய வாரிசுக்கு பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்
லண்டன்: பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் புதிய வாரிசு, இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியருக்குப் பிறந்த குழந்தைக்கு, ஜோஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டது. பிரிட்டனில் இருக்கும் பந்தயம் கட்டும் நிறுவனங்களில் பெரும்பாலானவை, இந்தக் குழந்தைக்கு ஜோர்ஜ் என்றே பெயரிடப்படும் என்று கணித்திருந்தன.
-
‘ஸஹாபாக்கள் வரலாறு-ரமழான் விசேட ஒலிப்பதிவு: பாகம்: 8,9,10
காத்தான்குடி அல்-மனார் அறிவியற் கல்லூரியின் மஸ்ஜிதுல் ஹைதரி பள்ளிவாயலில் ‘ஸஹாபாக்கள் வரலாறு’ எனும் ‘உத்தம நபித் தோழர்களின் உயரிய வாழ்க்கை வரலாறு’ உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று சம்பவங்கள் பயான் நிகழ்வின் பாகம் -8,9,10 ஆகியவற்றின் ஒலிப்பதிவுகள் எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.
-
ஜப்பானில் இடம்பெற்ற 25வது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் இலங்கையில் ஒரே ஒரு முஸ்லிம் மாணவியாக கலந்து கொண்டு வருகைதந்த காத்தான்குடி மாணவிக்கு கௌரவம்.
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தநகர் வரலாற்றில் முதன் முறையாக மீரா பாலிகா தேசிய பாடசாலையிலிருந்து இம்முறை ஜப்பான் புக்கோக்கா நகரில் இடம்பெற்ற 52 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றிய 25வது ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைதந்த 2012ம் ஆண்டு 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 188 அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற சாதனையாளர் முகம்மட் லாபீர் பாத்திமா நிபாஸத்தை பாராட்டும் நிகழ்வும் விஷேட இப்தார் நிகழ்வும்
-
ISO-ECARDS நிருவனத்தின் ஏற்பாட்டில் மீள்குடியேற்றகிராமமான காரமுனையில் வறிய குடும்பங்களுக்கு ரமழானுக்கான உலர் உணவு பொதிகள் விநியோகம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காரமுனை: ECARDS நிருவனத்தின் ஏற்பாட்டில் மீள்குடியேற்றகிராமமான காரமுனையில் வாழும் வறிய குடும்பங்களுக்கான ரமழானுக்கான உலர் உணவு பொதிகள் விநியோகம் இன்று நிருவனத்தின் பணிப்பாளர் ஜுனைட்நளீமியின் தலைமையில் இடெம்பெற்றது.
-
அவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை
அஹமட் ஆஸிர் ACJU: உலகளாவிய முஸ்லிம்களுக்காகவும் நமது நல்வாழ்வுக்காகவும் நாட்டில் ஒற்றுமை சகவாழ்வு என்பன நிலவவும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் நீங்கவும் நம் சமூகத்தைப் பிழையாகப் புரிந்து கொண்டிருப்போருக்கு நல்லெண்ணத்தைக் கொடுக்கவும் நாம் பிரார்த்திக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
170 பேருடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற கப்பல் மூழ்கியது!
மெல்போர்ன்: இலங்கையின் கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று ஐக்கிய அரபு இராச்சிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எனினும் தற்போதே அது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
-
மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்களுக்கு புதிய சட்டம் அறிமுகம்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் இருந்து செல்லும் பெண்கள் இரண்டு பக்கங்களிலும் கால்களை வைத்து அமர்ந்து செல்ல வேண்டும் எனும் போக்குவரத்துச் சட்டம் தற்போது அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
-
காத்தான்குடியில் ரமழான் இரவுத் தொழுகைகளில் பெண்கள் அதிக ஆர்வம்!
– விசேட நிருபர் காத்தான்குடி: தற்பொழுது உலகம் முழுவதிலும் முஸ்லிம்கள் ரமழான் மாதத்தை அடைந்து, நல்லமல்களில் ஈடுபட்டு வருகின்றனர். காத்தான்குடியில் இம்முறை அதிகளவான தாய்மார்களும், சகோதரிகளும் நள்ளிரவு வரை இறை வணக்கங்களில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
-
சட்ட விரோத ஆஸி பயணங்கள்: 1500க்கு அதிகமானோர் இதுவரை கடலில் மூழ்கி உயிரிழப்பு
கொழும்பு: அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோத மாகப் படகுகள் மூலம் சென்றவர்களில் இதுவரை 1500 ற்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
-
பள்ளிவாசலுக்கு தீ வைப்பு… ராமநாதபுரத்தில் பதற்றம்
– OIT ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம், கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இங்கு நேற்று இரவு சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் பள்ளிவாசலில் இருந்த தொப்பிகள், பாய்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் அங்கு இருந்த மின்விசிறிகளும் சேதமாயின.
-
குவைத்தில் முதல் முறையாக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
– ஊடகப் பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக சமயம், சமூகம், கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்