Author: yourkattankudy.com
-
ஆனையிறவில் புதிய ரயில் நிலையத்திக்கான அடிக்கல் நடும் வைபவம் நாளை
கொழும்பு: 15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
-
கொழும்பில் மினி சூறாவளி: பல வீடுகள், வாகனங்கள் சேதம் – ஒருவர் பலி
கொழும்பு: கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளனடி சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
ஜம்மு காஷ்மீர் எல்லையில் 7 மாதங்களில் 150 முறை ஊடுருவிய சீனா
– OIT ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லையில் கடந்த 7 மாதங்களில் 150 முறை சீனா ஊடுருவியிருப்பது தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர் கதையாகி வருகிறது. மற்றொரு பிராந்தியமான லடாக் பிரதேசத்தில் இலக்கு வைத்து சீனா தொடர்ந்து ஊடுருவலை மேற்கொண்டு வருகிறது.
-
சொக்லட் ஆசைகாட்டி ஆயுதமுனையில் கடத்தப்படும் ஆப்கான் சிறுவர்கள்!
லண்டன்: விவரமறியா பாலகர்களுக்கு சொக்லெட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி, பயங்கரவாதத்தை தாலிபன்கள் விரிவு படுத்தி வருவதாக நெஞ்சை உறைய வைக்கும் ஆவணப்படம் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. உணவுக்காக வாடி வரும் ஆப்கன் குழந்தைகள் மனதில், சொக்லெட் மற்றும் மற்ற இனிப்புகள் ஆசைகளைத் தூண்டி அவர்களை மனித வெடிகுண்டுகளாக தாலிபன்கள் காட்டுவதாக அந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
-
கறுப்பு ஜூலை (1983-07-23)
இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
-
கிண்ணியா பைசல் நகர் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் விஜயம்!
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியாவில் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றும் நடவடிக்கை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பைசல் நகர் பிரதேசத்திலுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான காணியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பிரிக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் கட்டிடத்திற்கான அடிக்கல் ஜெய்கா திட்டத்தினூடாக அண்மையில் நாட்டப்பட்டது.
-
இலங்கையில் முஸ்லிம் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுமா?
கொழும்பு: இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்து பேச்சுகள் இடம்பெறவுள்ளன. நாளை செவ்வாய்கிழமை இது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தான் சந்தித்துப் பேசவுள்ளதாக அகில இலங்கை
-
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு ஆண் குழந்தை
லண்டன்: இளவரசர் வில்லியமின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி, கேட்டுக்கு, ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. திங்கட்கிழமை மாலை 4 மணி 24 நிமிடங்கள் அளவில் இந்தக் குழந்தை பிறந்தது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
மன உறுதிக்கு பெயர் பெற்ற மலாலா!
– அஹமட் ஆஸிர் மலாலா யூசுப்ஜாய், 16 வயது பாகிஸ்தான் மாணவி. மன உறுதியின் மறுபக்கம். பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில், பஷ்டூன் பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதியில், குஷால் பப்ளிக் பள்ளி என்ற பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்தி வரும், ஜியாயுதீன் யூசுப்ஜாய் மகள் இவர்.
-
’13’ ஐ ஆதரித்து கிழக்கு மாகாண சபையில் பிரேரணை மு.கா.குழுத் தலைவர் ஜெமீல் நாளை சமர்ப்பிக்கிறார்!
– பழுலுல்லாஹ் பர்ஹான் திருக்கோணமலை: அரசமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எதிர்த்தும் 13ஆவது திருத்த சட்டத்தை ஆதரித்தும் நாளை 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
-
பிரான்சில் தொடரும் புர்கா போராட்டம்….
– அஹமட் ஆஸிர் பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது இரவும் வன்முறைகள் நடந்துள்ளன. பிரான்ஸின் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்திரை- புர்கா அங்கி அணிவதற்கு உள்ள தடையை எதிர்த்து நடந்துவரும் போராட்டங்களிலேயே இந்தக் கலவரங்கள் நடந்துள்ளன.
-
மன்னார் மாவட்டத்தின் மாந்தை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்…அமைச்சர் றிசாத் பதியுதீன் கலந்து கொண்டார்..
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மாந்தை: தாங்கள் மீள்குடியேற்றத்திற்கு மாந்தை பிரதேசத்திற்கு சுடுகாடாக அன்று காட்சியளித்தது,எமது அமைச்சர் றிசாத் பதியுதீனின் முயற்சியால் இன்று இப்பிரதேசம் பாரிய அபிவிருத்திகளை கண்டுவருவதாக தெரிவித்துள்ள மாந்தை பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர்