Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முஸ்லிம் பெண்ணைப்போல் வேடமணிந்து கொள்ளையிட்ட இராணுவ கப்டன்!

    கண்டி: முஸ்லிம் பெண் போன்று ஆடை அணிந்து கண்டியில் தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையிட முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த கப்டனான ஏ.எம்.யூ. சமரகோன் என்பவரே இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

  • நல்வாழ்த்துக்கள்..

    – உங்கள் காத்தான்குடி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இவ்வருடம் 2013/08 /25 ஞாயிற்றுக்கிழமை நடாத்த கல்வி அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது. பரீட்சைக்கு தோற்றும் மாணவச் செல்வங்களின்  பரீட்சை முடிவுகள் சிறப்புடன் அமைய எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

  • நேற்றிரவு காத்தான்குடியில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்….

    விசேட நிருபர்- காத்தான்குடி: தாக்கப்பட்ட மாணவன் தொடர்பாக புதிய காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தினரால் நேற்றிரவு (24/08/2013) வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் எமது வாசகர்களுக்காக பதிவேற்றப்படுகிறது.                ———————————–

  • பிரதேச செயலாளர் மக்களுக்கான அதிகாரியா? அல்லது …?

    அபூ சலாமாஹ் புல்மோட்டை: திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்குற்பட்ட புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர்களுக்கும் 23.08.2013ஆம் திகதியிடப்பட்டு பிரதேச செயலாளர் ஏ. உமாமகேஸ்வரனால் ‘ புல்மோட்டை பிரதேச தொல்பொருள் மற்றும் பூஜா பூமி தொடர்பான காணிக் கோரிக்கை முன்வைத்தல் தொடர்பாக ‘ என்ற தலைப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள

  • இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை சர்வதேச பல்கலைக்கழகங்களோடு இணைத்து மேலதிக கல்வித்திட்டங்களை உள்வாங்க தீர்மானம் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு

    முகமட் சஜி காத்தான்குடி: இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் கல்வியுடன் கூடிய தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையிலான புதிய பாடத்திட்டங்களை உள்வாங்கி அதன் மூலமான கற்கைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • தலைமைகள் இழக்கப்படுவதற்கு பிரதான காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே இருந்தது – றிசாத் பதியுதீன்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா சிலாவத்துறை: வடக்கில் முஸ்லிம் பிரதி நிதித்துவம் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை தனித்து களம் இறக்கியிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் தெரிவித்துவருவதானது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்.

  • தொழுகை நடாத்திய மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய உஸ்தாத்!

    NTJ காத்தான்குடி: கடந்த ரமளான் மாதம் காத்தான்குடியை அண்டியுள்ள பாலமுனை எனும் கிராமத்திலுள்ள மஸ்ஜிதுல் அம்மார் எனும் பள்ளிவாயலில் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் கல்வி பயிலும் சிரேஷ்டப் பிரிவு மாணவன் T.Lஅதாவுல்லாஹ் எட்டு ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை நடாத்தி இருந்தார்.

  • காத்தான்குடி பிரதேசத்தில் 7லட்சம் ரூபாய் பெறுமதியான 36000 சட்டவிரோத சிக்ரட்டுக்களை காத்தான்குடி பொலிசார் கைப்பற்றினர்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றிலும் ஓரு களஞ்சியசாலையிலும் இருந்து சுமார் 7ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான (36000) முப்பத்து ஆறாயிரம் சட்டவிரோத சிக்ரட்டுக்களை இன்று சனிக்கிழமை பகல் காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பொறுப்பதிகாரி ஆர்.சமீர எதிரிசூரிய தலைமையிலான பொலிஸ்

  • முப்படையினர் சிவில் பாதுகாப்புப் பணிகளிலிருந்து அகற்றப்படுவர் – கோதபாய

    கொழும்பு: முப்படையினர் சிவில் பாதுகாப்புப் பணிகளிலிருந்து அகற்றிக்கொள்ளப்படுவர் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முப்படையினரையும் சிவில் பாதுகாப்புப் பணிகளிலிருந்து கிரமமான முறையில் அகற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

  • உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் பூநொச்சிமுனை கடற்கரையில் விஷேட பயான் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் பூநொச்சிமுனை: மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடற்கரையில் அமைந்துள்ள ஓரே ஒரு பள்ளிவாயலான உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் நிருவாகம் ஏற்பாடு செய்த விஷேட பயான் நிகழ்வு 23-08-2013 வெள்ளிக்கிழமை நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 10.15 மணிவரை பூநொச்சிமுனை கடற்கரை உமர் இப்னு கத்தாப் பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.

  • அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல் தொடர்பில் பேசமுணைந்தால் அவர்கள் கைது செய்யப்படும் நிலை உருவாகலாம்- ஆசாத் சாலி

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல் தொடர்பில் பேசமுணைந்தால் அவர்கள்  கைது செய்யப்படும் நிலை உருவாகலாம் என தெரிவித்துள்ள தேசிய ஜக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி, ஜக்கிய தேசிய கட்சியின் யாணைச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற ரவூப் ஹக்கீமினால் கூட இது குறித்து பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டார்.

  • கர்பலா நகர் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கர்பலா: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் கர்பலா நகர் ஸ்டார் இளைஞர் சமூக சேவை  அமைப்பு ஏற்பாடு செய்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று 23-08-2013 வெள்ளிக்கிழமை மாலை  மட்-கர்பலா நகர் அல்மனார் வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை  அமைப்பின் தலைவர் எம்.எஷ்.ஏ.றஸீத் தலைமையில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 971 972 973 974 975 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar