Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஓட்டமாவடி சிறுவன் கொலை! சந்தேக நபர் கைது

    ஓட்டமாவடி: ஓட்டமாவடியில் கடந்த 17ம் திகதியிலிருந்து காணமல்போய் நேற்று பிற்பகல் 04.00 மணியளவில் ஓட்டமாவடி, மடுவத்து வீதியில் சாக்கடையிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக சிறுவனின் கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபரொருவரை மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

  • முஸ்லிம் மக்களின் முடிசூடா மன்னன் சேர் ராசிக் பரீத்

    (இன்று அவரின் நினைவு நாள்: எமது இன்றைய முஸ்லிம் தலைவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய கட்டுரை) 29 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாம் மர்ஹும் சேர் ராசிக் பரீத் என்ற உத்தமமான ஒரு மனிதரை நினைவு கூருகிறோம். அந்த மாமனிதர் விசேடமானவராகத்தான் இருக்க வேண்டும். நிச்சயம் அவர் சிரேஷ்ட மனிதர்தான் “சேர் ராசிக் பரித்” என்ற நாமம் இலங்கையின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பதித்துவிட்ட உயரிய நாமமாகும்.

  • வாழைச்சேனையில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தால் பரபரப்பு!

    வாழைச்சேனை: வாழைச்சேனை ஓட்டமாவடி மடுவத்து வீதியிலிருந்து சுமார் 11 வயது மதிக்கத்தக்க சிறுவனொருவனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

  • கல்முனை மாநகர சபையில் கடமையாற்றுகின்ற காவலாளிகள் தொடர்பாக முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிபுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விளக்கம் கோரும் கலந்துரையாடல்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபையில் கடமையாற்றுகின்ற காவலாளிகள் தொடர்பாக முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிபுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விளக்கம் கோரும் கலந்துரையாடல் இன்று (22.08.2013) முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  • அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகர் மாநகர சபையுடன் காத்தான்குடி நகர சபையை இணைப்பதற்கு காத்தான்குடி நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று புதன்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது. இங்கு இடம்பெற்ற சபை அமர்வில் சபை தீர்மானங்களாக யுனப்ஸ் நிறுவனம் காத்தான்குடி பிரதேசத்தில் 3வருடம் குப்பை பிரச்சினையை கையாளுவதெனவும் அவுஸ்திரேலியா அரசின் நிதியுதவியுடன் காத்தான்குடியில் பாரிய

  • ‘பெறுகின்ற சம்பளத்திற்காக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமையினை செவ்வனே நிறைவேற்ற வேண்டும்’ -கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: பெறுகின்ற சம்பளத்திற்காக தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமையினை செவ்வனே நிறைவேற்ற வேண்டும்இ நீங்கள் எனக்கு விசுவாசமாக நடக்க வேண்டிய தேவை இல்​லை ஆனால் மாநகர சபைக்கு விசுவாசமாக உங்களது கடமைகளை நிறை வேற்ற வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

  • ‘சட்டத்தின் குறிக்கோள் நீதியை அடைதல் என்பதால் அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும்’ -மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலானாய்வு அதிகாரி அப்துல் அஸீஸ்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இன்று நாளுக்கு நாள்  குற்றச் செயல்களின் எண்ணிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது. சட்டம்  எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

  • மக்கள் ஆட்சிக்கான இணக்கப்பாட்டு மக்கள் ஒப்பந்தத்தில் PMGG மற்றும் FJP ஆகியன கைச்சாத்திட்டன

    – PMGG ஊடகப்பிரிவு கொழும்பு: ‘மக்கள் ஆட்சிக்கான இணக்கப்பாட்டு மக்கள் ஒப்பந்தம்’ எனும் வேலைத்திட்டம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (22.08.2013) கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கையின் 9 பிரதான அரசியற் கட்சிகளும் 50க்கும் மேற்பட்ட சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டு நிறுவனங்களும் இணைந்து முன்னெடுக்கவுள்ள மேற்படி வேலைத்திட்டத்தில் பிரதான 10 இணக்கப்பாடுகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன.

  • மேலதிக கட்டணம் அறவிடும் முகவருக்கெதிராக நடவடிக்கை!

    கொழும்பு: புனித ஹஜ்ஜுக்காக இம்முறை சவூதி அரேபியா செல்லும் ஹாஜிகளிடமிருந்து ஒருவருக்கு நான்கு இலட்சம் ரூபா மாத்திரமே அறவிடவேண்டுமென முகவர்களுக்கு சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி உத்தரவிட்டுள்ளார். இத்தொகைக்கு மேலாக அறவிடும் முகவர்கள் குறித்து முஸ்லிம் சமய திணைக்களத்தில் ஹாஜிகள் முறையிட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

  • மன்னார் மாவட்டத்தில் இளைஞர்களைின் திறமைகளை காணப்படும்’ – றிப்கான் பதியுதீன்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லாஹ் மன்னார்: மன்னார் மாவட்டத்தில் இளைஞர்களைின் திறமைகளை இனம் கண்டு அவற்றை தேசிய மட்ட நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்களை தாம் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக வடமாகாண சபைக்கு மன்னார் மாவட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

  • எளிமையாக இடம்பெற்ற வசீம் அக்ரம்-செனீரா தொம்ஸன் திருமணம்

    – MJ இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட்  அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான வசிம் அக்ரம் 47, தனது 30 வயதான அவுஸ்திரேலிய காதலி  செனீராவை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் மக்கள் தொடர்பு ஆலோசகரான காதலி செனீராவிடம் வசிம் அக்ரம் திருமணம் செய்துகொள்வது குறித்து கடந்த மாதம் பேசினார். இதனையடுத்து இருவீட்டர் சம்மதத்துடன்  திருமணம் செய்துகொண்டனர்.

  • துப்பாக்கி ரவையினால் சபையில் சர்ச்சை

    கொழும்பு: வெலிபேரிய ரதுபஸ்வல சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ரவையினால் நேற்று சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ரதுபஸ்வல சம்பவம் தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அஜித் மான்னப்பெரும எம்.பி., ரதுபஸ்வலயில் சுடப்பட்டதாகக் கூறி ரவை போன்ற ஒரு பொருளை சபையில் காண்பித்தார்.

←Previous Page
1 … 973 974 975 976 977 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar