-
கருணாநிதி
சென்னை: ஐந்து முறை முதல்வராக பதவிவகித்த கருணாநிதி, தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஐந்து முறை தமிழக முதல்வராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (1957 – 2018) தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய முத்துவேல் கருணாநிதி தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி…
-
“சுஹதாக்கள் தினம்”
இன்று முகநூலில் வீர வசனம், வீராப்பு பேசுபவர்கள், முகநூலில் ஒழிந்துகொண்டு பதிவேற்றுபவர்கள், கலாசார சீரழிவுக்கு வித்திடும் ஓர் போதை சமூகத்திற்கு முன், காத்தான்குடி சந்தித்த இரத்த இரவு – அக்காலப்பகுதியில் காத்தான்குடியில் வசித்த ஒவ்வொரு காத்தான்குடி மகனும் மறந்திடாத, இருள் சூழ்ந்த தொடர் இரவுகளுக்கிடையில், அந்த 03-08-1990 வெள்ளி இரவு சுத்திகரிக்கப்பட்டு இன்றுடன் வருடங்கள் 28 ஆகும். பல்லாயிரக்கணக்கான வாசகர்களைத் தொட்டுச் சென்ற காத்தான்குடி பள்ளிவாயல்கள் படுகொலைகள் பற்றிய எமது கடந்த கால கட்டுரையினை இத்துடன் மீள்…
-
பல சாதனைகளை ஏற்படுத்திய பகர் ஸமான்
புலவாயோ: ஜிம்பாப்வேக்கு எதிரான நான்காவது ஒருதினப் போட்டியின்போது, முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த சாதனையை பாகிஸ்தானின் பகர் ஸமான் மற்றும் இமாம் உல் ஹக் புரிந்தனர். இதைத் தவிர பாகிஸ்தானுக்கு முதல் இரட்டை சதம் என பல சாதனையை முறியடித்தார் ஜமான். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
“இஸ்ரேல் இனி யூத தேசம்” – மசோதா நிறைவு
டெல் அவிவ்: இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம்.இந்த மசோதாவானது, ‘முழுமையான மற்றும் ஒற்றுமையான’ ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்கிறது.
-
முஸ்லிம் மீடியா போர மாநாட்டில் ஒன்பது பேருக்கு கௌரவம்
– எம்.எஸ்.எம்.ஸாகிர் கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது அகவையில் ஊடகத்துக்கு பங்களிப்புச் செய்த 9 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். கொழும்பு – 05 நாரஹேன்பிட்டிய அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு (21) சனிக்கிழமை போரத் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
-
சவுதியில் பாடகரைக் கட்டிப்பிடித்த பெண் கைது- காணொளி
தாயிஃப்: சவுதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீதேறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாயிஃப் இல் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத் அல் மொஹாண்டிஸ் என்ற அந்த பாடகர் மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று ஓடிச்சென்ற அந்த பெண் அவரை கட்டிப்பிடித்தார்.
-
உலக கோப்பை தொடரின் விருதுகள் விபரம்
இங்கிலாந்து அணித்தலைவர் ஹரி கேன் இந்த உலககோப்பை தொடரின் தங்க ஷூவை வென்றார். இத்தொடரின் சிறந்த வீரருக்கான தங்க பந்தை குரேஷிய வீரர் லூகா மோட்ரிக் வென்றார். பெல்ஜியம் நடுகள வீரர் ஈடன் ஹஸார்ட் இரண்டாவது சிறந்த வீரராகவும் மற்றும் பிரான்ஸின் ஆன்டாய்னி கிரீஸ்மென் மூன்றாவது சிறந்த வீரராகவும் தேர்ந்தெடுப்பட்டனர்.
-
உலகச் சம்பியனானது பிரான்ஸ்
மொஸ்கோ: மொஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது. எனினும் இறுதியில் பிரான்ஸ் வென்றது. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பிரான்ஸ் வீரர் ஆன்டோன் கிரீஜ்மன் அட்டகாசமாக பந்தை உதைத்தார். அந்த பந்தை தலையில் முட்டி தடுப்பதற்காக எம்பினார் குரோஷியா வீரர் மரியோ மண்ட்ஜூகிக். ஆனால் பந்து அவர் தலையில் பட்டு இன்னும் எம்பி கோல் கீப்பரின்…
-
குருக்கள் மடத்துப் பையன்
– MJ லண்டன்: 12-07-1990. கோடை வெயில். உஷ்ணத்தில் ஆங்காங்கே உருகி- புழுதி கலந்த காற்றில் காத்தான்குடி பிரதான வீதியில் ஆங்காங்கே இளைஞர்கள் குழுமி நிற்கின்றனர். கொழும்பிலிருந்து கல்முனை ஊடாகப் பயணித்த காத்தான்குடி மக்கள் அம்பலாந்துறைச் சந்தி-குருக்கள் மடத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்ட தகவல் பிரதான வீதியிலிருந்து ஊருக்குள் பரவுகிறது.
-
இங்கிலாந்தில் குடும்ப வன்முறைகளுக்கு காரணமாக அமையும் உலகக் கிண்ணப் போட்டிகள்
லண்டன்: மதுவிலும், சூதுவிலும் தங்களை அர்ப்பணித்த இங்கிலாந்து மக்கள் தங்களது அணி 3வது இடத்தை அடைந்தாவது வீடு வந்து (Coming Home) சேருமா என எதிர்பார்த்திருக்கும் இந்நேரத்தில், உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்து குடும்ப வாழ்க்கையில் விரிசல்களை ஏற்படுத்தி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2002, 2006 மற்றும் 2010 உலகக்கோப்பை போட்டிகளில் (2014க்கு பிந்தைய தரவுகள் இல்லை) இங்கிலாந்து கால்பந்து அணி தோற்ற தினங்களில் ஆங்கிலேய காவல்துறை பிரிவுகளில் ஒன்றான லன்காஸ்டர் பிரிவில் பதிவான குடும்ப வன்முறை வழக்குகள்…
-
“புதிய முறையில் தேர்தல் இடம் பெறுமெனில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50 % வீதம் குறைவடையும்”
கொழும்பு: புதிய முறையில் தேர்தல் இடம் பெறுமெனில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50 % வீதம் குறைவடையும் என தேசிய ஷூரா சபை அச்சம் வெளியிட்டுள்ளது. புதிய ஆசன மற்றும் விகிதாசார கலப்புத் தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைக்கான பிரத்தியேகமான தொகுதி எல்லைகளை மீள் நிர்ணயம் செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதன அறிக்கையை கடந்த 10/02/2018 அன்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரிடம் சமர்ப்பித்தது.
-
நிறைவடைந்ததா ஜாம்பவான்களின் காலம்..?
மொஸ்கோ: 1970ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து இதுவரை நாக்அவுட் சுற்றில் அதிக அளவிலான கோல்கள் அடிக்கப்பட்ட நாளான நேற்று, இந்த உலகக்கோப்பையின் கதாநாயகர்களாக கருதப்பட்ட லயோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரின் அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளன.