-
இன்றைய ஜூம்ஆ பேருரை
தலைப்பு – ரமழானின் சிறப்புகளும் ஸகாத்தின் முக்கியத்துவமும் உரை – அஷ் ஷெய்க் அலியார் (ரியாதி) இடம் – மீரா ஜும்ஆ பள்ளிவாயல் காத்தான்குடி – 01 காலம் – 27.06.2014
-
உலகக் கிண்ணம்: 32 நாடுகளில் 16 நாடுகள் வெளியேற்றம்: இரண்டாம் சுற்று சனிக்கிழமை ஆரம்பம்!
– MJ றியோ: மிக விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் உலககக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் ஆரம்ப பசுற்று (குழு) போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. சுமார் இருவாரங்களாக இடம்பெற்ற இந்த ஆரம்பச் சுற்றில் 48 போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
-
காலத்தின் தேவை கருதி ஜும்ஆ தொழுகையை வீதியில் தொழுவதை தவிர்ப்பது சிறந்தது!
கொழும்பு: வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆத் தொழுகையின்போது, பள்ளிவாசலுக்கு வெளியே தொழுவதை முஸ்லிம்கள் இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் சகல முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
புனித ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு
கொழும்பு: ஹிஜ்ரி 1435 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு, நாளை 29ஆம் திகதி சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
-
மாயமான விமானம்: தேடல் திசையில் மாற்றம்!
பேர்த்: காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் புதிய முயற்சிகள் சமீபத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அது விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட இடத்திருந்திலிருந்து மேலும் தெற்காக நகரும் என்று அவுஸ்திரேலியா கூறியிருக்கிறது.
-
புதுப்பொழிவுடன் காட்சிதரும் காத்தான்குடி மஸ்ஜிதுல் குலபா உர்ராஷிதீன்!
-எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: புனித ரமழானை வரவேற்று அமல்களை அதிகரிக்கும் முகமாக பள்ளிவாயல்கள் வர்ணம் பூசப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன இந்த வகையில் காத்தான்குடி ஊர் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபா உர்ராஷிதீன் பள்ளிவாயல் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் வர்ணம் பூசப்பபட்டு அழகாக காட்சி தருவதை படத்தில் காணலாம்.
-
மட்/அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கம் அமைத்தல்
– எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடியின் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெரும் பாடசாலையான காத்தான்குடி மட்/அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்கம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாக 30.05.2014 அன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நோன்புப் பெருநாள் கழித்து பாரியதொரு பொதுச்சபைக் கூட்டம் ஒன்றினை நடாத்தவது என தீர்மானிக்கப்பட்டது.
-
சுவாரஸிற்கு 9 சர்வதேச போட்டிகள் மற்றும் 4 மாதங்கள் விளையாடத் தடை!
– MJ லண்டன்: உருகுவே நட்சத்திர வீரர் சுவாரஸ், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இத்தாலியுடனான போட்டியில், இத்தாலி வீரர் ஜோர்ஜியோவின் தோள்பட்டையில் கடித்தமைக்காக, சுவாரஸூக்கு 9 சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஃபீஃபா தடை விதித்திருப்பதுடன், 4 மாதங்களுக்கு எவ்வித உதைப்பந்தாட்டப் போட்டிகளிலும் விளையாட முடியாது எனவும் அறிவித்திருக்கின்றது.
-
‘ஈராக் இனியும் ஒன்றாக இருக்க சாத்தியம் இல்லை’ – இஸ்ரேல் ஜனாதிபதி
– SHM வோஷிங்டன்: ஈராக் இனிமேலும் ஒன்றிணைந்த தேசமாக இருக்க சாத்தியமே இல்லை என்று அமெரிக்கஜனாதிபதி ஒபாமாவிடம் தெரிவித்துள்ளார் இஸ்ரேல் ஜனாதிபதி சீமான் பெரிஸ். ஈராக்கில் உள்நாட்டுப் பிரச்சனைகளால் கலவரங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்நிலையில் அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் மற்ற நாடுகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆலோசனை தெரிவிக்க கோரியிருந்தார் ஒபாமா.
-
‘கார் வாங்க வேண்டாம்’: அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு!
– S-90 டெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவை சகாக்களை புதிய கார்கள் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவையும் அவர்களுக்கு அவர் பிறப்பித்துள்ளார். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிக்கன நடவடிக்கையாக இதை அமைச்சர்களுக்கு அறிவித்துள்ளார் மோடி.
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஸ்ரீநிவாசன் நியமனம் உறுதி
மெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சர்ச்சைக்குரிய முன்னாள் தலைவராக இருந்த என்.ஸ்ரீநிவாசனின் நியமனத்தை மெல்போர்னில் கூடிய கவுன்சிலின் முழு அவை இன்று வியாழக்கிழமை உறுதி செய்தது.
-
20 வயதுப் பெண்ணை மணந்தார் சுஹைப் அக்தார்
– SHM லாஹூர்: ராவல்பிண்டி எகஸ்பிரஸ் என அழைக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுஹைப் அக்தார் திருமண வாழ்க்கையில் இணைந்துகொண்டார். தற்போது 38வயதாகும் அக்தார், 20 வயதான ரூபப் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.