-
ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஹமாஸ் அழைப்பு
காஸா: இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் இணையும்படி பலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் லெபனான் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ‘போராட்டத்தில் லெபனான் முன்னணியும் எம்முடன் இணையும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்’ என்று ஹமாஸ் அரசியல் பிரிவு துணைத்தலைவர் மூசா அபூ மர்சூக் ரஷ்ய செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.
-
காஸா மக்களைக் கொல்ல இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குகிறது
நியுயோர்க்: காஸா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க ஆயுதக்கிடங்கில் இருந்து ஆயுதங்களை பெற அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதோடு குறித்த ஆயுதக்கிடங்கிற்கு கடந்த வாரத் தில் கையெறி குண்டுகள் மற்றும் பீரங்கிக் குண்டுகளை விநியோ கித்ததை அமெரிக்கா உறுதிசெய்துள்ளது.
-
‘ஜித்தாவில் விற்கப்பட்ட போலியான குர்ஆன் பிரதிகளை பறிமுதல் செய்யவும்’ – மக்கா ஆளுநர்
– MJ மக்கா: போலி பிரதிகளை உள்ளடக்கி குர்ஆன் வடிவில் விற்கப்பட்ட போலி குர்ஆன் பிரதிகளை உடனடியாகப் பறிமுதல் செய்யுமாறு மக்கா ஆளுநர் இளவரசர் மிஷால் பின் அப்துல்லாஹ் உத்தரவிட்டிருக்கிறார்.
-
‘ஹமாஸ் கட்டிய சுரங்கங்கள் அழிக்கப்படும்வரை தாக்குதல்’-இஸ்ரேல்
டெல் அவிவ்: காஸா விலிருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ, பலத்ஸ்தீன போராளிகளான ஹமாஸ் கட்டிய சுரங்கப் பாதைகளை, போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், இஸ்ரேல் அழிக்க உறுதியுடன் இருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நேடன்யாகு கூறியிருக்கிறார்.
-
அம்பாறை மாவட்ட மட்ட விளையாட்டு போட்டி அட்டாளைச்சேனையில்
– ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகப்பிரிவுகளிடையே வருடந்தோறும் நடைபெற்றுவரும் விளையாட்டு போட்டி நிகழ்வுகளின் 2014 ம் ஆண்டுக்கான மாவட்ட மட்ட இறுதிப்போட்டி நிகழ்ச்சிகள் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
-
காஸாவில் ஷஹீதான குழந்தைகள்….கண்ணீர் விட்டு அழுத ஐ.நா. அதிகாரி (காணொளி)
– AF-90 ஜெரூஸலம்: இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த 15 குழந்தைகள் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் நிவாரண முகமையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கின்னஸ், கண்ணீர் விட்டு அழுதார்.
-
‘அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு’ ஜெக் கலிஸ்
– SHM துபாய்: அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தென் ஆபிரிக்க சகலதுறை ஆட்ட வீரர் ஜெக் கலிஸ் அறிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜக் கலிஸ், உலக தரமுள்ள துடுப்பாட்டவீரராகவும், வேகப்பந்து வீச்சாளராகவும், இரண்டிலும் ஒரே நேரத்தில் ஜொலித்தவர். உலக கிரிக்கெட் சகலதுறை வீரர் பட்டியலில் எப்போதும் கலீஸ் முன்னணியில் இருப்பார்.
-
இஸ்ரேலின் காஸா கொலைகளை வாய் மூடி மெளனமாக வேடிக்கை பார்க்கும் அரபு நாடுகள்..ஏன்?
– AF-90 கெய்ரோ: இஸ்ரேலின் வெறியாட்டத்தை அரபு நாடுகள் சொல்லி வைத்தாற் போல அமைதியாக கை கட்டி, வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அவை ஓரணியில் நிற்கின்றன. இதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
-
‘அச்சுறுத்தல்களுக்கு’ எதிராக யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கே ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும், அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை எதிர்த்தும், அவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.
-
“பலஸ்தீனம் புரிந்துகொள்வது எப்படி” Dr.ILM.றிபாஸ் அவர்களின் ஆய்வுக் கண்ணோட்டம்
– PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: தற்போது பாலஸ்தீனில் இடம்பெற்று வரும் நிலைமைகள் தொடர்பில் “பலஸ்தீனம் புரிந்துகொள்வது எப்படி” எனும் தலைப்பில் ஆய்வுக் கண்ணோட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
-
ஏறாவூருக்கு புதிய காழி நீதிபதி நாளை நியமனம்
– ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூரின் தற்போதைய காழி நீதிபதி முஹம்மது காசீம் அப்துல் மஜீத் மௌலவி அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுறுவதால், நாளை 01-08-2014 தொடக்கம் புதிய காழி நீதிபதியாக முன்னாள் ஏறாவூர் உலமாசபை தலைவரும், முன்னாள் ஏறாவூர் பிரதேச சபை தவிசாளரும், தற்போதைய முஹைதீன் ஜும்மா பள்ளிவாசல் இமாமுமான அப்துல் காதர் அப்துல் மஜீத் மௌலவி நியமனம் பெறுகிறார்.
-
நேற்று புதன்கிழமை மேலும் 106 காஸா மக்கள் ஷஹீத்
– MJ காஸா: இஸ்ரேலால் காஸா மக்கள் மீது மேற்கொள்ளப்படும் எரிகணைத் தாக்குதல்களில் நேற்று புதன்கிழமை மாத்திரம் 106 பொதுமக்கள் ஷஹீதாகியுள்ளனர். காஸாவின் பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 16 மாணவர்களும், சந்தைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 17 பேரும், இதர தாக்குதல்களில் மீதமானோரும் ஷஹீதாகியுள்ளனர்.