காத்தான்குடி: தற்போது பாலஸ்தீனில் இடம்பெற்று வரும் நிலைமைகள் தொடர்பில் “பலஸ்தீனம் புரிந்துகொள்வது எப்படி” எனும் தலைப்பில் ஆய்வுக் கண்ணோட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கில் நேற்று இஷா தொழுகையினைத் தொடர்ந்து இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பாலஸ்தீனம் கடந்த காலங்களில் எவ்வாறான நிலைமைகளைச் சந்தித்து வந்திருக்கின்றது போன்ற வரலாறுகள், அங்குள்ள மக்களைச் சுற்றி பின்னப்பட்டுள்ள சதிகள் தொடர்பிலும் ஆதாரபூர்வமாக விளக்கங்களை வழங்கினார் Dr.ILM.றிபாஸ் அவர்கள்.
இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள் ஊர்பிரமுகர்கள் உட்பட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Published by




Leave a comment