ஏறாவூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

dengu eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் இருப்பதால் முன்கூட்டியே ஏறாவூர் பொதுச் சுகாதார பணிமனையும், ஏறாவூர் பொலிசாரும் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஏறாவுரின் பல பகுதிகளிலும் இன்று மேற்கொண்டனர்.

இந் நடவடிக்கைகளுக்கு முன்னர் பள்ளிவாசல்கள் ஒலி பெருக்கி மூலம் தினமும் மக்களுக்கு விழிப்பூட்டல் செய்த பிறகே இன்று ஏறாவுரின் பல்வேறு பகுதிகளுக்கும் இக்குழுவினர் விஜயம் மேற்கொண்டு டெங்கு நுளம்பு காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.

பாவிக்கப்படாத கிணறுகள், கூரைப் பீலிகள், கவனிப்பாரற்றுக் கிடக்கும் வெற்றுப் பாத்திரங்கள் போன்றவற்றிலிருந்து டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டெடுக்கப் பட்டதாக இக்குழுவினர் தெரிவித்தனர்.

dengu eravur

dengu eravur

Published by

Leave a comment