-டீன் பைரூஸ்-
காத்தான்குடி: சிறுவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு சிறுவர்களுக்கான நிரந்தர சிறுவர் புங்கா ஒன்றினை ஹெப்பி லேன்ட் என்ற பெயரில் அதன் நிர்வாகத்தினர் காத்தான்குடி கடற்கரை (அன்வர் பள்ளிவாயல்) அருகாமையில் பாரிய செலவில் அமைத்து வருகின்றனர்.
மேற்படி ஹெப்பி லேன்ட் எதிர் வரும் ஹஜ்பெருநாளைக்கு முன்னதாக திறப்பதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக அதன் ஏற்பாட்டாளா் AM பௌமி தெரிவித்தார்.
நாட்டின் பல இடங்களில் இருந்தும் ஹெப்பி லேன்ட் இக்கு மக்கள் வருவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதனால் மேற்படி ஹெப்பி லேன்ட் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டு வருவதினை காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக சிறுவா்களுடன் வரும் தாய்மார்கள்,சகோதரிகள் தனியாக இருப்பதற்கான விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி ஹெப்பி லேன்ட் பிரதியமைச்சர் தாஜூல் மில்லத் கௌரவ அல்ஹாஜ் MLAM ஹிஸ்புல்லாஹ் MA/MP அவர்களினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
Published by








Leave a comment