-
இலங்கை முஸ்லிம்களுக்கு அலுத்கம ஞாபகம் இருக்கிறதா? இத்தாவிலிருந்து வெளியாகும் எமது சகோதரிகள்..
– AK- 70 காத்தான்குடி: இலங்கை முஸ்லிம்களால் மறக்கமுடியாத ‘அலுத்கமை கலவரம்’ நிகழ்ந்து இன்றுடன் 4 மாதங்கள் 10 நாட்கள் நிறைவடைகின்றன. எமது அரசியல்வாதிகளின் நெஞ்சங்களில் இருந்து அலுத்கமை மறந்தாலும், ஈமானுள்ள எந்த முஸ்லிமாலும் மறக்க முடியாத அலுத்கமை முஸ்லிம்கள் மீதான பேரினவாதத்தின் திட்டமிட்ட தாக்குதல்களில் சஹீதான எமது சகோதரர்களின் மனைவிமார் இன்று, இத்தாவிலிருந்து வெளியேறுகின்றனர்.
-
கள்ளச் சந்தை எண்ணெய் வியாபாரம்: உலகில் அதிக வருமானமுள்ள ஒரே ஒரு இயக்கம் ஐ.எஸ்.
– AF- 90 பக்தாத்: சிரியா, ஈராக் நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டே அந்த நாடுகளுக்கு கள்ளச் சந்தையில் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து பெருமளவு நிதியை குவித்து வருகிறது. ஐ.எஸ். இயக்கம். இந்த இயக்கம்தான் இன்று அதிக வருவாய் உள்ள பணக்கார போராட்ட அமைப்பாக உருவெடுத்துள்ளது.
-
வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
– அபூஹக் கொழும்பு: நிதி அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இன்று (24) பி.ப 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது நகரங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த உட்கட்டமைப்பு வசதிகள் கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த தசாப்தத்தில் அர்த்தமுள்ள அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் வரவு செலவுத் திட்டம் ஆரம்ப உரையில் தெரிவித்தார்.
-
‘ஸஹ்றான் மஸ்ஊதியின் முகத்திரை கிழிந்தது. மௌலவி ஸஹ்றான் விவாதத்திலிருந்து தப்பியோட்டம்’
-FK-47- காத்தான்குடி; ‘ஸஹ்றான் மஸ்ஊதியின் முகத்திரை கிழிந்தது. மௌலவி ஸஹ்றான் விவாதத்திலிருந்து தப்பியோட்டம்’ எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று (24.10.2014 வெள்ளிக்கிழமை) ஜூம்ஆ தொழுகையின் பின் விநியோகிக்கப்பட்டது.
-
வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது
கொழும்பு: நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் நன்மை பயக்கக்கூடிய மிகச் சிறந்த வரவு செலவுத் திட்டம் இன்று (24) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் 10 ஆவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும்.
-
பாலர் விளையாட்டரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு..பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் பங்கேற்பு.
-டீன்பைரூஸ்- காத்தான்குடி: புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லா வளாகத்தில் இயங்கி வரும் ஹெப்பி ஹிட்ஸ் மற்றும் ஹிஸ்புல்லா பாலர் பாடசாலை என்பவற்றிக்கான “பாலர் விளையாட்டரங்கு” அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (23.10.2014 வியாழக்கிழமை) பாடசாலை வளாகத்தில் பாடசாலை தலைவர் அல்ஹாஜ் MSM அப்துல்லா JP தலைமையில் நடை பெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் சிப்லி பாறுாக் Eng கலந்து கொண்டார்.
-
‘சாய்ந்தமருது சிறார்கள் கவலைப்பட வேண்டாம்’ – ஹரீஸ் எம்.பி
சாய்ந்தமருது: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருதுகடற்கரை சிறுவர் பூங்கா அமைப்பதற்காக கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர்சிராஸ் மீராசாஹிபின் காலத்தில் 1 கோடியே 67 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்தது.
-
அல்கைதாவுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சவுதிப் பெண்களுக்கு சிறை
றியாத்: அல்கைதா இயக்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றத்திற்காக சவுதி அரேபியாவில் பெண்கள் நால்வருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தங்களின் மகன்மார் ஜிஹாத் போராளிகளாவதற்கு உதவிய குற்றச்சாட்டும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
-
காத்தான்குடியில் வழமைக்கு மாறாக வாழைமரத்திற்கு நடுவே அதிசயமாக குலை போடும் அதிசய வாழைமரம்!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி -01, ஸாவியா வீதியில் இலக்கம் 44-13 ஜி.எஸ்.ஓ லேனில் வசிக்கும் எம்.எம்.அலியார் என்பவரின் வீட்டில் இருக்கும் வாழைமரத்தில் வழமைக்கு மாறாக வாழைமரத்திற்கு மேலே குலை போடும் பூ தற்போது மரத்தின் நடுவே அதிசயமாக குலை போட்டுள்ளது.