-
“மஹிந்த சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்”
கொழும்பு: இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும் என்று, நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
-
“வன்னி மாவட்ட மக்கள் எனக்கு வழங்கிய வாக்குகளால் இன்று மக்கள் நலன் பணிகளை செய்யக் கூடியதாக உள்ளது”
– முல்லைத்தீவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: 20 வருடத்துக்கு மேலாக செயலற்று போயுள்ள ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீள இயங்க வைத்து இதன் மூலம் பிரதேசத்தின் இளைஞர்,யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் வேலைத்திட்டம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
-
“மக்களால் பெறப்பட்ட சுதந்திரம் அரசியல்வாதிகளால் களவாடப்படுவதை அனுமதிக்க முடியாது”: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: “மக்களால் பெறப்பட்ட இந்த சுதந்திரம் சுய நல அரசியல்வாதிகளால் மீண்டுமொருமுறை களவாடப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த சுதந்திரத்தின் சொந்தக்காரர்களாக மக்கள் மாற்றப்பட வேண்டும்” என NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
“உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றியே முதலமைச்சர் நியமனம்”
அம்பாறை: முதலமைச்சர் சம்பந்தமாக ஒரு கிழமையாக தீர்மானம் எடுப்பவர்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய தவராக காட்ட முட்பட்டார்கள். ஆனால் கட்சியின் போரளிகளும் உயர்மட்டத்தினரும் இதற்கு ஆதரவாக உள்ளார்கள் என்பது தான் உண்மை. இந்த உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றியே எமது கட்சியின் சார்பாக கிடைத்த முதலமைச்சர் பதவி ஒன்று.
-
வெளிநாட்டு பண நோட்டுக்களுடன் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய வர்த்தகர்
– எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: எழுபத்தேழு இலட்ச ரூபாய் பெறுமதியான பவுண், யூரோ மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்த தொலைபேசி உதிரிப்பாக வர்த்தகரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
-
ஹஜ் கோட்டாக்கள் மூவாயிரமாக அதிகரிக்கப்படும்
கொழும்பு: இலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ளவர்களின் எண்ணிக்கையை மூவாயிரமாக உயர்த்த முஸ்லிம் கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் துரித நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார். கடந்த வருடம் கோட்டா முறையில் 2 ஆயிரத்து 200 பேருக்கு புனித ஹஜ் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
-
ஊழல்- மோசடிகளை விசாரிக்க சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு
கொழும்பு: இலங்கையில் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
-
டெங்கு தொடர்பாக பெண்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு
– இஸ்லாமிக் சென்ரர், காத்தான்குடி காத்தான்குடி: தற்போது எமதூரில் மிக வேகமாக பரவிவருகின்ற டெங்கின் பாதிப்பிலிருந்து எமது குழந்தைச் செல்வங்களையும் எம்மையும் பாதுகாத்து ஆரோக்கியான சமூக சூழலை கட்டியெழுப்ப “இஸ்லாம் வழியுறுத்தும் சுத்தம் பேணுவோம்! டெங்கை ஒழிப்போம்!!” எனும் கருப்பொருளில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த டெங்கு தொடர்பாக பெண்களுக்கான
-
சவுதியில் இலங்கையைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை!
றியாத்: சவூதி அரேபியாவில் கொலை குற்றச்சாட்டு ஒன்றுடன் தொடர்புடைய மூன்று இலங்கையருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் ராகம, மஹவ மற்றும் தெஹிவளையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் பொதுமகன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த மூவருக்கும் மரணத்தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்கானில் இஸ்லாமிய அரசு ஆதரவுத் தலைவர் கொலை
காபூல்: ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடைய போராளிக் குழு ஒன்றின் தலைவர் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார் என்று அங்கிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஹெல்மண்ட் மாகாணத்தில் இருந்த முன்னாள் தலிபான் தளபதியான முல்லா அப்துல் ரவுஃப், இஸ்லாமிய அரசுடனான தனது தொடர்பை கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் விடுத்துள்ள ஊடக அறிக்கை
பழுலுல்லாஹ் பர்ஹான் / டீன் பைரோஸ் திருகோணமலை: கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கினால் ஒரு ஊடக அறிக்கை ஒன்று 09 இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
-
கல்லடி சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரி மாணவி மரணம்!
MTM. Farhan கல்லடி: கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரியில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.