-
“கிழக்கில் அமையவுள்ள தேசிய மாகாண அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது”
– இர்ஷாத் றஹ்மத்துல்லா திருகோணமலை: கிழக்கில் அமையவுள்ள தேசிய மாகாண அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்று தெரிவித்த கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதில் நாமே அதிகமாக அக்கறையுடன் இருந்துவந்துள்ளதாகவும் கூறினார்.
-
காதலர் தினம் : அது ஒரு கலாச்சார யுத்தப் பிரகடனம்
– ஏறாவூர் சிந்தனை போரம் காதல் ஒரு இயற்கையான உணர்வு. இந்த உணர்வின்காரணமாகத் தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. சந்ததிகள் உருவாக்கப்படுகின்றன; மனிதஇனமே மரித்து விடாமல் நீடித்து வாழ்கின்றது. காதல் உணர்வை இறைவன் படைத்ததன்நோக்கமே இதுதான். மனித இனத்தின் நீடித்த வாழ்வு.
-
கிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்
திருகோணமலை: கிழக்கு மாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமன தாக நிறைவேற்றப்பட்டு ள்ளது.கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலை மையில் ஆரம்பமானது.
-
துமிந்த சில்வாவின் வங்கிக் கணக்குகள் 60 வீதம் ஆராயப்பட்டுள்ள நிலையில் இரகசிய பொலிஸாரினால் 6 மணி நேரம் விசாரணை!
கொழும்பு: கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் வங்கிக் கணக்குகள் 60 வீதம் ஆராயப்பட்டுள்ள நிலையில் துமிந்த சில்வா எம்.பி. நேற்று இரகசிய பொலிஸாரினால் சுமார் 6 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
-
ஐ எஸ் பிடியிலிருந்த அமெரிக்கப் பெண்மணி கொலை
நியுயோர்க்: சிரியாவில் இஸ்லாமிய அரசு தீவிரவாதக்குழுவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண்மணி கைலா ஜீன் முல்லர் கொல்லப்பட்டுள்ளதை அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா உறுதிசெய்திருக்கிறார்.அவர் கடந்த 18 மாதங்களாக அந்தத் தீவிரவாதக் குழுவால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தார்.
-
கட்சியின் தவிசாளர் என்ற கெளரவம் என்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூதுக்கு கொடுக்கப்படும்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் திருகோணமலை: சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கெளரவ தவிசாளர் பசீர் சேகுதாவூத் அவர்கள் என்றும் எங்களுடைய கட்சியின் தவிசாளரே. அந்த வகையில் அவரை கெளரவப்படுத்தும் கடமை எங்கள் அனைவருக்கும் உள்ளதோடு அண்டன் பாலசிங்கம் எனப்படும் பெரிய மணிதனாக தன்னை ஒப்பிட வேண்டாம் என்ற கருத்தினை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அண்டன் பாலசிங்கம் என வர்ணிக்கப்பட்ட முன்னால் அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்களின் அரசியல் முன்னெடுப்புக்கள் எதுவாக அமையப் போகின்றது?
-
கிழக்கு முதலமைச்சருக்கு இல்மி அஹமட் லெவ்வை பிரார்த்திப்பு
இல்மி அஹமட் லெவ்வை காத்தான்குடி: கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் கௌரவ, ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கட்கு நல்வாழ்த்துக்களை தெரிவிற்துக் கொள்ளும் அதே நேரத்தில் தங்களது ஆட்சிக்காலத்தில் கிழக்குமண் வழம் பெறவேண்டும். இதற்காக பிரார்த்திப்பதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
-
தன்னோடிருக்கும் கட்சிகளைக் கைவிடாது ‘அவர்களுக்காக’ தேர்தலில் போட்டியிடுவேன்: முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
முஹம்மது பஹத் கொழும்பு: நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பிரதமருக்கான அதிகாரங்களுடனான புதிய ஜனநாயக பாதையை நோக்கி இலங்கை பயணிக்கத் தயாராகும் நிலையில் உறுதிமொழி அடிப்படையிலான குறைந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்துடன் அமையப் பெற்றுள்ள தற்போதைய அரசை பல வழிகளிலும் முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
Mohamed Fahath கொழும்பு: வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
-
இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள்
லண்டன்: இலங்கையைச் சேர்ந்தவர்கள் சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129 கணக்குகள் பேணப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
-
ஏப்ரல் 4ம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம்
– ஜூனைட் எம். பஹ்த் கொழும்பு: நாடாளுமன்றம் இந்த வாரம் கலைக்கப்பட்டால், வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சியின் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நிறைவேற்றப்பட்டால் உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
-
“மருதமடு கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோறிக்கைகள் தொடர்பில் எனது கவனத்தை செலுத்துவேன்”
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: மருதமடு கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோறிக்கைகள் தொடர்பில் எனது கவனத்தை செலுத்துவேன் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.