-
நாலந்தா வித்தியாலய மாணவனுக்கு க.பொ.த சா/த பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறு
எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: இன்று (30) வெளியான க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக முதலாமிடத்தை கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரிந்து நிர்மால் விக்ரமசிங்க என்ற மாணவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
-
காங்கேயனோடை அல்-அக்ஸா மஹா வித்தியாலம் சாதணை
முகம்மட் சஜீ காங்கேயனோடை: மட்டகளப்பு மத்தி கல்வி வலயத்தில் காங்கேயனோடை அல் அக்ஸா மஹா வித்தியாலத்தில் இம்முறை க.பொ.ச.த (O/L) பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் இஸ்லாம் பாடத்தில் யு சித்தி பெற்று சாதணை படைத்துள்ளனர்.
-
18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி
கண்டி: 18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பொப்பி என்ற இந்த 18 வயதான யுவதி, 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் பெருந்தோட்டம் ஒன்றில் இருந்து பிரித்தானிய குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டனர்.இதன்பின்னர் பிரித்தானிய குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பொப்பி, தற்போது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
-
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் உதவியுடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா முனைப்பு
கொழும்பு: இலங்கையில் அரசாங்க மாற்றத்தை அடுத்து பாகிஸ்தானின் உதவியுடன் வளர்ந்துவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை இந்திய புலனாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்திய செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்திய புலனாய்வு சேவை அதிகாரி ஒருவரின் தகவல்படி,
-
கட்டாரில் ‘அல்லாஹ்வின் அருள்’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு
ஸனாஇய்யா: கட்டாரில் ‘அல்லாஹ்வின் அருள்’ எனும் தலைப்பில் வாராந்த இஸ்லாமிய வகுப்பு இன்று 30 திங்கட்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.
-
பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய தலைவராக அஸார் அலி தெரிவு
லாஹூர்: பாகிஸ்தான் ஒருநாள் அணியின் புதிய தலைவராக அஸார் அலியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தலைவர் ஷஹர்யார் கான் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இம்முறை உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்காதவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாகிஸ்தான் ஒருநாள் அணியில் விளையாடதவருமான அஸார் அலி, ஓய்வுபெற்ற மிஸ்பா உல் ஹக்கிற்கு பதில் பாக். அணித் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ளார்.
-
அறிமுகமாகும் புதிய தேர்தல் முறை: விபரம்
கொழும்பு: விருப்புவாக்குமுறை மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறை தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிக்கவுள்ளார். இன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற விருக்கும் இக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் உத்தேச தேர்தல் முறை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.
-
மீண்டும் ஆளுமையை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய அணி!!
மெல்போர்ன்: மெல்போர்ன் நகரில் நியூசிலாந்தை வீழ்த்தி ஐந்தாவது முறையாக அவுஸ்திரேலியா உலகக் கோப்பையை கைப்பற்றிய நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற கிரிக்கெட் திருவிழா முடிவுக்கு வந்தது.போட்டியை இணைந்து நடத்திய இரண்டு நாடுகளும் மோதிய இறுதி ஆட்டத்தில், அவுஸ்திரேலியா நியூசிலாந்தை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, உலகளவில் கிரிக்கெட் விளையாட்டில் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்தியது.
-
“எமது காணிப் பிரச்சினைகளை தீர்த்துத் தாருங்கள்”: கிழக்கு மாகாண ஆளுனரிடம் அமைப்பாளர் முபீன் வேண்டுகோள்
– ஏ.எல். டீன் பைரூஸ் ஏறாவூர்: கடந்த 22.03.2015 ஞாயிற்றுக் கிழமை ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட காணிப் பிரச்சினைகளை தீர்க்கும் விஷேட கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனான்டா கலந்து கொண்டு மக்கள் எதிர் நோக்கும் காணிப் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்கினார்.
-
மூதூர் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அனுமதியை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு மூதூர் பீஸ் ஹோம் அமைப்பு கோரிக்கை !
MM மூதூர்: சம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்திற்கு மூதூர் பிரதேச சபையினால் வழங்கப்பட்ட அனுமதியை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு மூதூர் பீஸ் ஹோம் அமைப்பு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனையில் பிரதமர் ரணில்
இர்சாத் ரஹ்மதுல்லாஹ் முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம், தமிழ் மக்களது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் துரித தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறும் முஸ்லிம்களது காணிகளை விடுவித்து கொடுக்கும் வகையில் ஒரு வாரகாலத்துக்குள் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றினை சமர்ப்பிக்குமாறும், துரித கதியில் முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தை நிறைவு செய்யும் வகையில் முல்லை மாவட்ட முஸ்லிம்களது மீள்குடியேற்றம் தொடர்பிலான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமி நாதனுக்கு பிரதமர் ரணில் விகரமசிங்க பணிப்புரை வழங்கினார்.