தேர்தலின் பின்னர் ஐ.தே.க. பலமான கட்சியாக மிளிரும் : அம்பாறையில் ரணில் தெரிவிப்பு

RanilWickramasinghe[1]அம்பாறை: எதிர்வரும் பொதுத் தேர்­தலின் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்சி நாட்டில் ஒரு பலம் பொருந்­திய கட்­சி­யாக மிளிரும் என பிர­தமர் ரணில் விக்கி­ரமசிங்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தேசிய அமைப்பாளருமான தயா கம­கேவின் அழைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்த பிர­தம ரணில் விக்­ரமசிங்க அரச வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதனையடுத்து நடை­பெற்ற பொதுக்­கூட்­டதில் கலந்து கொண்டு உரையற்றுகையிலேயே பிரதமர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

பிர­தம ரணில் விக்­கி­ரம சிங்க தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அம்­பாறை மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பலத்தை மேலோங்க செய்ய வேண்டும். அந்த வகையில் எதிர் வரும் பொது தேர்­தலை முன்­னிட்டு நாங்கள் எல்லோரையும் அர­வணைத்து செல்ல வேண்­டி­யுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­காக ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறி சேனாவை ஜனா­தி­பதி ஆக்­கி­யதில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு பெரும் பங்கு உண்டு. கடந்த தேர்தலில் அளித்த வாக்­கு­று­தி­களின் படி 100 நாள் வேலை திட்டத்தில் பொருட்கள் , எரி­பொருள் விலை குறைப்பு மற்றும் அரச ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு என்­ப­வற்­றையும் வழங்கியுள்ளோம்.

1977 ம் ஆண்டு காலப்­ப­கு­தியில் திறந்த பொரு­ளா­தார முறை நாட்டிற்கு கொண்டு வந்த நாம் ஆறு மாத காலத்திற்குள் நிறை வேற்று முறையையும் கொண்டு வந்தோம் என்றார்.

Published by

Leave a comment