– புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
புத்தளம்: புத்தளம் பஸ்தரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக கட்டிடத்தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் வர்த்தக நிலையம் முழுமையாக தீயில் எரிந்துள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர். கடைத்தொகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமே இந்த விபத்துக்கு காரணம் என ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.
அதே புத்தளம் பொலீஸார் மற்றும் விமானப் படைகளின் அதிகாரிகள் கடும் பிரயனத்தனத்துக்கு மத்தியில் தீ பர்மபலை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த போதும்,வர்த்தக நிலையம் முழுமையாக எரிந்து சாம்பராகியுள்ளது.
சேதவிபரங்கள் பற்றிய தரவுகளை புத்தளம் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Published by



Leave a comment