ரமழான் பிறை தீர்மானிக்கும் விசேட மாநாடு புதன்கிழமை

cresent_moon[1]கொழும்பு: ரமழான் மாதத்தை தீர்மானிக்கும் விசேட மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளியில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மாலை நேரம் 6.27 மணி முதல் ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்குமாறும் இலங்கையின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால்

தகுந்த ஆதாரங்களோடு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளி நிர்வாகம் அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக்கொள்கிறது.

தொலைபேசி இலக்கங்கள் 0112432110, 0115234044

தொலைநகல் – 0112390783

Published by

Leave a comment