-
ஐ. தே. கவுடன் இணைந்து 10 மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டி
கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பத்து மாவட்டங்களில் போட்டியிடவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து ள்ளது. இது தொடர்பாக ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
-
பல்மைரா நகரின் பழங்காலப் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, எச்சங்களை அழித்ததொழித்த ஐ.எஸ். தீவிரவாதிகள்!
லண்டன்: சிரியாவில் பாரம்பரியம் மிக்க பழம்பெரும் நகரான பல்மைராவின் பழங்காலச் சிதிலங்களிலுள்ள சிலைகள் என்று கூறப்படுபவைகளை ஆயுததாரிகள் உடைப்பதாகக் காட்டும் படங்களை இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக்குழு வெளியிட்டுள்ளது.
-
பொதுத்தேர்தல் தொடர்பான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் இளைஞர் பிரிவின் கலந்துரையாடல்
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த இல்லாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன அதனுடைய தெரிவாக அமையும் என்றும் மேலும், இன்னும் சில நாட்களில் தங்களுடைய இறுதியான நிலைப்பாட்டை எட்ட இருப்பதாக NFGGயின் தேசிய இளைஞர் கவுன்சிலின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.
-
அன்னப்பறவைச் சின்னத்தில் போட்டியிடுகிறது பொன்சேகாவின் கட்சி
கொழும்பு: பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் கட்சியான புதிய ஜனநாயக முன்னணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது. அதன் செயலாளரான சமில பெரேரா இதுதொடர்பில் தேர்தல் ஆணையாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக
-
“தாஜுதீனின் அழைப்பு விபரத்தை வழங்கமுடியாது” – டயலொக்
கொழும்பு: ரக்பி வீரர் தாஜுதீனின் மரணம் தொடர்பில் சாட்சியமாக கருதப்படும் கையடக்க தொலைபேசி அழைப்பு விபரத்தை வழங்குமாறு நீதிமன்றம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் டயலொக் நிறுவனம் பிரமாணப் பத்திரமொன்றை இன்று (02) வழங்கியிருந்தது.
-
ஜேர்மனி வாகன தயாரிப்புத் தொழிற்சாலையில் பணியாளரை நசுக்கிக் கொன்ற ரோபோ
– AF-90 பிராங்பேர்ட்: ஜெர்மனியில் உள்ள ஃபொக்ஸ்வேகன் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர் ஒருவரை ரோபோ கொலை செய்துள்ளது.ஜெர்மனியில் உள்ள பிரான்க்பேர்ட் நகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பவ்னடாலில் ஃபொக்ஸ்வேகன் நிறுவனத்தின் வாகன தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.
-
அசாத் சாலிக்கு ஏமாற்றம்: கிழக்கில் போட்டியிடுகிறார்?
கொழும்பு: தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமக்கு கண்டி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
-
இங்கிலாந்தின் அதியுயர் வெப்ப நிலை நேற்று பதிவாகியது
– MJ லண்டன்: இங்கிலாந்தின் கடந்த 9 வருடங்களின் பின்னர் அதி வெப்பநிலையாக 37.7 செல்சியஸ் வெப்பநிலை நேற்று புதன்கிழமை பதிவாகியது. லண்டன், ஹீத்ரோ விமானநிலையத்தில் இவ்வெப்பநிலை பதிவாகியிருந்ததாக பிரித்தானிய வானிலை நிலையம் அறிவித்திருக்கிறது.
-
மெதமுலன கூட்டம் மஹிந்தவுக்கு ஏமாற்றம்!!
ஹம்பாந்தோட்டை: மெதமுலனவில் நடைபெற்ற கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என மஹிந்த எதிர்பார்த்தபோதும் இறுதியில் அவருக்கு ஏமாற்றமே எஞ்சியதாகத் தெரியவருகிறது.
-
மக்கள் ஆணையைப் பற்றி பேசும் உரிமை மஹிந்தவுக்கு கிடையாது
தோல்வி கண்ட ஒருவர் அரசியலில் ஒதுங்கியிருக்க வேண்டும் கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எப்படி வந்தாலும் அவர் தோல்வியடைவது உறுதி. இறுதித் தோல்வியை அவருக்கு தெரியப்படுத்த காத்திருக்கிறோமென கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.