Category: Your Kattankudy
-
வடமாகாண சபை தேர்தலில் வன்னி மாவட்ட மக்கள் அரசாங்கத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்யும் வியூகத்தை வகுத்துள்ளது- றிசாத் பதியுதீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: நடை பெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் வன்னி மாவட்ட மக்கள் அரசாங்கத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்யும் வியூகத்தை வகுத்துள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார் தாராபுரத்தில் தெரிவித்தார்.
-
குளியாப்பிட்டியில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரம்
– ஆசாத் குளியாப்பிட்டி: ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் சூராவளி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
-
வடக்கில் வாழ்ந்த அனைத்து மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் கெளரவமாக வாழச் செய்வதே எனது நோக்கமாகும்- றிசாத் பதியுதீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா தலைமன்னார்: வடக்கில் வாழ்ந்த அனைத்து மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் கெளரவமாக வாழச் செய்வதே எனது நோக்கமாகும். அவற்றை இலக்காக கொண்டே எனது பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மக்கள் அபிவிருத்திகளை நோக்கி தற்போது செல்வதாகவும் கூறினார்.
-
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையிலான சிநேகபூர்வ உதைப்பந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி சன்றைஸுக்கு வெற்றிக்கிண்ணம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் பொலன்னறுவை: இலங்கையில் 30வருட கால கொடூர யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் முப்படையினருக்கும் மத்தியில் இன நல்லுறவைப் பேணும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக பொலன்னறுவையில் முப்படைகளின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு பொலன்னறுவை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
-
PPL-T20 2013 சம்பியன் கப் காத்தான்குடி மண்ணில்…………….
-டீன் பைரூஸ்- காத்தான்குடி;காத்தான்குடி சியாத் பௌண்டேஷனின் அனுசரணையுடன் காத்தான்குடி பூநொச்சிமுனை விளையாட்டுக் கழகம் நடாத்தும் PPL 2013 CHAMPIONS CUP T20 பதின்ஓராவது லீக் சுற்றுத் தொடர் சென்ற (31.08.2013 சனிக்கிழமை) பிற்பகல் 02.30. மணிக்கு பூநொச்சிமுனை மைதானத்தில் நடை பெற்றது.
-
மன்னார் மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளை TNA யின் PMGG தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பு வேட்பாளர் அய்யூப் அஸ்மின் சந்தித்தார்
– PMGG ஊடகப் பிரிவு, FM. பர்ஹான் மன்னார்: மன்னார் மாவட்டத்திலுள்ள சிவில் சமூகப் பிரதிநிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை மன்னாரில் இடம்பெற்றது. இதன்போது வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பின் வேட்பாளர் அய்யூப் அஸ்மின் மற்றும் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
-
நவநீதம் பிள்ளையிடம் முஸ்லிம் மக்கள் கட்சி அறிக்கை கையளிப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கை முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர் நோக்கும் பள்ளிவாயல் உடைப்பு போன்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விபரங்களை கொழும்பிலுள்ள ஐ நா காரியாலயம் மூலமாக நவநீதம் பிள்ளையின் கவனத்திற்கு முஸ்லிம் மக்கள் கட்சி கொண்டு வந்துள்ளது.
-
700 கோடி செலவில் ஒலுவில் துறைமுகம்
ஒலுவில்: இலங்கையில், கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மட்டக்களப்பு மாவட்டத்தில் திருகோணமலை – மட்டக்களப்பு நெடுங்சாலையில் பனிச்சங்கேனி பாலத்தையும் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகத்தையும் திறந்து வைத்துள்ளார்.
-
பரீட்சைகள் ஆணையர் முற்றாக மறுப்பு
கொழும்பு: தரம் 5 மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படாத இரண்டு வினாக்கள் நடந்து முடிந்த புலமைப் பரிசில் பரீட்சையில் கேட்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஸ்பகுமார மறுத்துள்ளார்.
-
நவநீதம்பிள்ளையின் கருத்து திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடு
கொழும்பு: ஐ. நா. வின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்றும் இலங்கையில் எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நவி பிள்ளை இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாகக் கருத்துக் கூறியிருக்கிறார்.
-
பிரபாகரன் அடம் பிடித்ததால்தான் தனி ஈழத்தைப் பெற முடியவில்லை: இளங்கோவன்
– OIT சென்னை: பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிக்கப்பட்டதுபோல இலங்கையில் இருந்து தமிழ் ஈழத்தை பிரித்து தனி நாடாக மாற்ற ராஜீவ்காந்தி முயற்சி செய்தார். ஆனால் ஈழத்தை பிரித்தால் நான்தான் அதிபராக இருப்பேன் என்று பிரபாகரன் அடம்பிடித்ததால் பிரிக்க முடியாமல் போய்விட்டது என்று புதுத் தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
-
வரதட்சணைக் கொடுமை: மணிக்கொரு மரணம்
டெல்லி: இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியா எங்கிலும் பார்க்க 2012ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.