-டீன் பைரூஸ்-
காத்தான்குடி;காத்தான்குடி சியாத் பௌண்டேஷனின் அனுசரணையுடன் காத்தான்குடி பூநொச்சிமுனை விளையாட்டுக் கழகம் நடாத்தும் PPL 2013 CHAMPIONS CUP T20 பதின்ஓராவது லீக் சுற்றுத் தொடர் சென்ற (31.08.2013 சனிக்கிழமை) பிற்பகல் 02.30. மணிக்கு பூநொச்சிமுனை மைதானத்தில் நடை பெற்றது.
மேற்படி போட்டி மருதமுனை மிரடியன் அணிக்கும் பூநொச்சிமுனை அணிக்கும் நடை பெற்றது.
ஆரம்பமாக முதலில் துடுபடுத்தாடிய மருதமுனை மிரடியன் அணியினர் 2௦ ஓவரில் 9 விக்கட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது ஜவ்பர் 2௦ பெற்றுக்கெடுத்தார்.
பதிலுக்கு துடுபடுத்தாடிய பூநொச்சிமுனன 18 ஓவர்களில் 113 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றன. இதில் சன்ஜீவன் 25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பூநொச்சிமுனை அணிக்கும் விளையாடி வரும் சன்ஜீவன் என்பவர் ஒரு சிறந்த ஆட்டக்காரா். இவர் கிழக்கு மாகாணம் மற்றும் இலங்கை கிறிக்கட் தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார்.
சன்ஜீவனை பாராட்டி காத்தான்குடி சியாத் பௌண்டேஷனின் பணிப்பாளர் அல்ஹாஜ். எம்.எஸ்.எம்.சியாட் மற்றும் பூநொச்சிமுனை அணியின் உறுப்பினர்களிாலும் பாராட்டி கொளரவித்து சின்னம் வழங்கப்பட்டது.
மேற்படி சன்ஜீவனை பாராட்டி பரிசில்கள் வழங்கும் போது……
பிரபல கிரிக்கட் வரணணையாளர் ஏ.எல். அம்ஜத்துடன் சன்ஜீவன்.



Leave a comment