Category: Your Kattankudy
-
க.பொ.த சா/த பரீட்சைப் பெறுபேறு: ‘டொப் 10’இல் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இடம்பெறவில்லை!
கொழும்பு: 2014 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளதுடன் சிறந்த பெறுபேறுகள் பெற்ற முதல் 10 பேர் என்ற பட்டியலில் எந்தவொரு தமிழ் முஸ்லிம் மாணவர்களின் பெயரும் உள்ளடங்கவில்லை. க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற 10 பேரின் பட்டியலில் சிங்கள மொழி மூல பாடசாலைகளின் பெயர்கள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன.
-
மட்டு-கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
மட்டக்களப்பு: மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி காலையில் 7.15 மணிக்கு புறப்படும் உதய தேவி புகையிரதம் 7.30 க்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். காலை 10.30 க்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கி புறப்படும் புகையிரதம் காலை 11.30 க்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும்.
-
கிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ் வாங்கல்
மட்டக்களப்பு: கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் பலர் ஆளும் தரப்புக்கு வழங்கியுள்ள ஆதரவை விலக்கிக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கலைக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை மீது ‘ஊழல் விசாரணை’
கொழும்பு: ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தலைவராக சிதத் வெத்தமுனி, செயலாளராக பிரகாஷ் ஷப்டர், பொருளாளராக லுசில் விஜேவர்தன, துணைத் தலைவராக குஷில் குணசேகர, கபில விஜேகுணவர்தன ஆகியோர் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு ஏப்ரல் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கின்றனர்.
-
கோறளைப்பற்று மேற்கு, மத்தி ஆகிய பிரதேச செயலாளா் பிரிவின் அபிவிருத்திக்குழு கூட்டம் பிரதியமைச்சா் அமீா் அலி தலைமையில் நடைபெற்றது
– எம்.ரீ.எம். பாாிஸ் கோறளைப்பற்று: கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலாளா் பிரிவில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரச அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயும் விஷேட அபிவிருத்தி குழு கூட்டம் (30) பிரதேச செயலகங்களின் கேட்போர் கூடத்தில் பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ். அமீா் அலி தலைமையில் நடைபெற்றது.
-
2014ம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு காத்தான்குடி பிரதேச கல்விப் பணி்ப்பாளரின் வாழ்த்துச் செய்தி
ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: 2014ம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், அதிபர்கள், ஆசியர்களுக்கும் காத்தான்குடி பிரதேச கல்விப்பணி்ப்பாளர் எம்.ஏ.சீ.எம். பதுர்தீன் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
-
அருங்காட்சியசாலையில் உருவச்சிலைகள் வைக்க ஆதரவு வழங்கும் ஆலிம்களுக்கு NTJ யின் பகிரங்க விவாதச்சவால்!! – இன்று கடிதம் அனுப்பி வைப்பு
NTJ முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அமைத்து வரும் அருங்காட்சியசாலையில் “உருவச் சிலைகளையும் உருவ பொம்மைகளையும் வைக்கலாம்” எனக் கூறி அறிவீனமான பத்வாவை வழங்கி வரும் ஆலிம்களான M.S.M. அலியார் பலாஹி (ஜம்மிய்யதுல் உலமா தலைவர்), M.B.M. மும்தாஸ் (மதனி) M.A.M. மின்ஹாஜ் (பலாஹி) ஊடகவியலாளர் M.S.M முஸ்தபா (பலாஹி), காத்தான்குடி இளம் உலமாக்கள் முன்னணி இயக்கத்தினர் ஆகியோருக்கு இன்று (30.03.2015) எமது ஜமாஅத் விவாத அழைப்பை நேரடியாகக் கையளித்தது.
-
2014ம் ஆண்டு க.பொ.த.சா/த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கி.மா.ச. உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் வாழ்த்து
டீன் பைரூஸ் காத்தான்குடி: கடந்த 2014ம் ஆண்டு நடந்த க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் ஒன்பது A தர சித்தியுடன் ஒன்பது மாணவிகளும் மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் ஒன்பது A தர சித்தியுடன் மூன்று மாணவிகளும் அல்ஹிறா வித்தியாலயத்தில் ஒன்பது A தர சித்தியுடன் இரண்டு மாணவர்களும் அல் அமீன் வித்தியாலயத்தில் ஒன்பது A தர…
-
பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
கொழும்பு: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாட்டிற்கு வந்தவுடன் கைது செய்யுமாறு கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திவி நெகும திட்டம் ஊடாக மிக சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
கொழும்பு: அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வில்பத்து சரணாலய காணி கையகப்படுத்தல் தொடர்பிலேயே இவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடு
அபூ அஸ்ஜத் வவுனியா: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் செயற்பட்டுவரும் இனவாத சக்தியான பொது பலசேனா, சிங்கள ஜாதிக பெரமுன என்னும் பெயரில் அமைப்பொன்றினை உருவாக்கி மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதுடன், அந்த அமைப்புடன் தொடர்பபட்ட ஒருவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் வில்பத்து சரணாலயத்தினை கையகப்படுத்தி அதில் வெளிநாட்டவர்களை குடியமர்த்தியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு தெரிவித்துள்ளது.
-
முன்னாள் மத்திய வங்கி ஆளுநரிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை
எம்.ஐ. அப்துல் நஸார் கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உலகில் மசகு எண்ணெயின் விலை உயர்வடைந்து, குறைவடைந்து சென்ற வேளைகளில் இலங்கைக்கு பாதகம் ஏற்படாத வகையில் சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தங்களினால் இலங்கைக்கு பாரதூரமான பாதிப்புகள் ஏற்பட்டு கோடிக் கணக்கான டொலர்கள் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு,