Category: Your Kattankudy
-
ஹிஸ்புல்லாஹ் கையாட்களின் முற்றுகை: பொறியியலாளர் அப்துர் றஹ்மானை ‘அல்பா’ மீட்டார்!
காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா – ந.தே.முன்னணி கூட்டணியில் 2ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிட்ட பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானை, இம்மாவட்டத்தில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கையாட்கள் பலர் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடாத்த முயற்சித்த சம்பவம் ஒன்று, இன்று மாலை தேர்தல் வாக்களிப்புக்கள் முடிவடைந்த சற்று நேரத்தில் காத்தான்குடியில் பதிவாகியுள்ளது.
-
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் 25 பேரை நீக்கினார் மைத்ரி
கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 25 பேர், அக்குழுவிலிலுருந்து வெளியேற்றப்பட்டு, அந்த பதவிகளுக்கு புதிதாக 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக்கட்சியின் தலைவரும் இலங்கை ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வாக்களிப்பு நிறைவு: மட்டக்களப்பில் 60 வீதம் வாக்குப் பதிவு (முழு விபரம்)
கொழும்பு – 65% புத்தளம் – 66.5% கம்பஹா – 70% களுத்துறை – 65% கண்டி – 75%
-
அமைதியான வாக்குப்பதிவுகளும் மக்களின் அதிக ஆர்வமும்
கொழும்பு: பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெருமளவு அமைதியாக நடந்துவருவதாக கூறப்படும் இன்றைய வாக்குப்பதிவில் வாக்களிப்பதற்காக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஹபக்ஷ இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார்.
-
முக்கிய அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் தேர்தல் வாக்களிப்பில்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய கட்சிகளிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
-
சற்று முன்னர் வரை வாக்களிப்பு
கொழும்பு: தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு மாவட்டங்களின் வாக்களிப்பு வீதங்கள் குறித்து அந்தந்த மாவட்ட செயலகங்கள் வெளியிட்டுள்ள வாக்களிப்பு வீதங்கள் பின்வருமாறு,
-
காத்தான்குடி பிரதேசத்தில் சுமுகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான் தேர்தல் வாக்களிப்பு சுமுகமான முறையில் இடம்பெற்றது.
-
மணக்கோலத்தில் வாக்களித்த மணமகன்!
தம்புள்ள: ஜப்பானிய பெண்ணொருவரை மணம் முடித்துள்ள இலங்கை இளைஞர் ஒருவர் இன்று மணப்பெண்ணுடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார்.இந்த சம்பவம் சீகிரிய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மணமகன், மணமகளுடன் சீகிரிய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார்.
-
அமையப்போகின்ற அரசாங்கம் நல்லாட்சிக்குரிய அரசாங்கமாக அமையக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது: அப்துர் ரஹ்மான் (காணொளி)
NFGG காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சற்று முன்னர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். காத்தான்குடி மட்/மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் தமது வாக்கினைப் பதிவுசெய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் அவர் தெரிவித்தார்.
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் அமைதியான முறையில் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்களிப்பு இடம்பெறுகின்றது. காத்தான்குடியிலுள்ள ஹிழுறியா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாக்களித்தார்.
-
காலை பத்துமணிவரையுள்ள வாக்களிப்பு வீதம்
கொழும்பு: நடைபெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் சுமூகமான முறையில் வாக்களிப் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தவகையில் இன்று காலை 10 மணிவரை வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்களிப்பும், குருநாகல் மாவட்டத்தில் 30 வீதமான வாக்களிப்பும் திகாமடுல்ல மாவட்டத்தில் 25 – 30 வீதமான வாக்களிப்பும் யாழ் மாவட்டத்தில் 20