கொழும்பு: நடைபெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் சுமூகமான முறையில் வாக்களிப் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்தவகையில் இன்று காலை 10 மணிவரை வன்னி மாவட்டத்தில் 33 வீத வாக்களிப்பும், குருநாகல் மாவட்டத்தில் 30 வீதமான வாக்களிப்பும் திகாமடுல்ல மாவட்டத்தில் 25 – 30 வீதமான வாக்களிப்பும் யாழ் மாவட்டத்தில் 20
வீதமான வாக்களிப்பும் களுத்துறை மாவட்டத்தில் 25 வீதமான வாக்களிப்பும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வீதமான வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக குறித்த மாவட்டங்களின் அரச அதிபார்கள் தெரிவித்துள்ளனர்.
Published by
![ballot_box1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/ballot_box11.jpg?w=150&h=113)
Leave a comment