- NFGG
காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சற்று முன்னர் தனது வாக்கினைப் பதிவு செய்தார். காத்தான்குடி மட்/மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் தமது வாக்கினைப் பதிவுசெய்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், அமையப்போகின்ற அரசாங்கம் நல்லாட்சிக்குரிய அரசாங்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். அதற்கான சாத்தியக்கூறுகள் இன்றைய தேர்தலில் காணப்படுகின்றது. குறிப்பாக சட்டம் ஒழுங்குகள் இந்தத் தேர்தலில் கணிசமாக பேணப்பட்டு வருவதாகவும், அதற்காக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவிர்த்துக் கொள்வதாகவும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

Leave a comment