Category: Your Kattankudy
-
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் காலமானார்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் அலியார் பாத்தும்மா (வயது 86) இன்று (19.11.2015) வியாழக்கிழமை அதிகாலை காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.)
-
“காத்தான்குடி பிரதேச காணி எல்லை நிர்ணயம் தொடர்பில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது”- சிப்லி
காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச காணி எல்லை நிர்ணயம் தொடர்பில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது இதற்காக நாம் ஒன்றுபட்டு வட்டார எல்லைகள் அதிகரிக்க பாடுபட வேண்டும் இவ்வாறு நேற்று இடம்பெற்ற காணி எல்லை நிர்ணயம் தொடர்பாக காத்தான்குடியில் இடம்பெற்ற ஊடக மாநாட்டின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
-
குண்டுப்புரளி காரணமாக இரு எயார் ஃபிரான்ஸ் விமானங்கள் அவசரத் தரையிறக்கம்!
– MJ வோஷிங்டன்: அமெரிக்காவின் வோஷிங்டன் டலஸ் மற்றும் லொஸ் ஏன்ஜல்ஸ் ஆகிய விமான நிலையங்களிலிருந்து இன்று பிரான்ஸ் தலைநகர் பரிஸை நோக்கி பறந்துகொண்டிருந்த 055 மற்றும் 065 ஆகிய இரு விமானங்களும் அநாமோதய தொலைபேசி அழைப்பையடுத்து அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக லொஸ் ஏன்ஜல்ஸ் விமானசேவை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
பங்களாதேஷில் ஃபேஸ்புக் முடக்கம்!
டாக்கா: வங்கதேசத்தில் செல்வாக்கு மிக்க எதிரணித் தலைவர்கள் இருவரின் மரண தண்டனையை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து, ஃபேஸ்புக் மற்றும் ஏனைய இணையவழி தகவல் பரிமாற்ற தளங்களை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின்போது, நடந்த போர்குற்றங்கள் தொடர்பில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
இலங்கைப் பெண்ணொருவர் சவுதியில் கல்லெறிந்து கொல்லப்படுகிறார்
றியாத்: இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவூதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே விபச்சாரக் குற்றம் சாட்டில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவூதியில் பணி புரியும் திருமணம் முடிக்காத மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளதாக உறுதிப்படுத்ததை அடுத்தே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
சவுதியில் இரு பொலிசார் சுட்டுக்கொலை
றியாத்: சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை பொலிஸ் வாகனம் ஒன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானபோது அதில் இருந்த இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதி மாகாணமான, அல் காதிஃபில் நடந்த இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை 2020 முதல் ஒழிக்கப்படும்
கொழும்பு: நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறைமை 2020 ஆம் ஆண்டு முதல் முற்றாக ஒழிக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரங்களை ஒழிக்கும் சட்ட நடவடிக்கையை அடுத்து வரும் 6 மாதங்களுள் நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
-
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலர்ஸ் விருது வழங்கும் நிகழ்வு
ஹாசிப் யாஸீன் கொழும்பு: கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலர்ஸ் இரவு விருது வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (16) கொழும்பு கிங்ஸ்பெரி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்காவின் தலைமையில் இடமபெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
-
சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு “இஸ்லாமிய பயங்கராவதம்” என்று பெயரிட்டுள்ளார்கள்
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நவீன காலனித்துவ மூலோபாய திட்டமிடல்களின் படி புதிய உலக ஒழுங்கில் தேசங்கள் மீதான நேரடி ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதில்லை. துருவ மயப்படுத்தப் பட்டுள்ள மேலைத்தேய முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளின் அரசியல் பொருளாதார இராணுவ நலன்களிற்கேற்ப தேசங்களின் ஆட்சி அதிகாரங்கள் வடிவமைக்கப் படுகின்றன.
-
“காத்தான்குடி நகரசபைக்கு தேர்தல் தனியாக நடத்தப்படுகின்றபோது 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டும்”: ஹிஸ்புல்லாஹ்
முகம்மட் சஜீ காத்தான்குடி: புதிதாக நடத்தபட இருகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காத்தான்குடி நகர சபை க்கு தேர்தல் தனியாக நடத்த படுகின்ற பொழுது 12 வட்டாரங்களாக பிரிக்கபடவேண்டும் என்ற ஒரு பிரேரணை முன்னர் வைத்து இருந்தோம். இருப்பினும் கடந்த நூறுநாள் திட்டத்தில் காத்தான்குடி 10 வட்டாரமாக குறைக்கப்பட்டு 10 வட்டாரமாக இப்பொழுது வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
50 நுளம்பு வலைகள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பொது மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கி வரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ரெயின்கோநிறுவனத்தினால் சுமார் 1500 ரூபா பெறுமதியான 50 நுளம்பு வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் நீரிழிவு தினம் அனுஸ்டிப்பு
சப்னி அட்டாளைச்சேனை: கடந்த உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் தொற்றாநோய் பிரிவு ஏற்பாடு செய்த உலக நீரிழிவு தினமானது மக்களுக்கு நீரிழிவு தொடர்பான விழிப்புணவு ஏற்படுத்தல் என்ற தொனிப் பொருளில் இன்று (17) அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் . நக்பர் தலமையில் நடைபெற்றது.