Category: Your Kattankudy
-
ஜித்தாவில் கடும் மழை
MJ ஜித்தா: சவுதி அரேபியாவின் வரத்தகப் புகழ்மிக்க புராதன நகரமான ஜித்தா உட்பட சவுதி அரேபிய மேற்கு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் பெய்துவரும் கனத்த மழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக சவுதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
மது, சிகரெட் தடை: ஆட்சி கவிழும் நிலை ஏற்படலாம்
கேகாலை: மதுபானம், சிகரெட் விற்பனை வரி மூலம் வருடமொன்றிற்கு 115 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.மது விற்பனையைத் தடை செய்ய முடியும், எனினும் மதுபானம் உபயோகிப்போர் கிளர்ந்தெழுந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதைத் தடுக்க முடியாது போகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் தலைவர் என்ற வகையில் மது மற்றும் சிகரட் விற்பினைக்கான அனுமதியை இரத்துச் செய்யத் தயார்.
-
பயங்கரவாத செயல் காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியது: ரஷ்யா
மொஸ்கோ: எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் அண்மையில் மெட்ரோஜெட் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்திற்கு பயங்கரவாத செயலே காரணம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒரு கிலோ டிஎன்டி வெடிபொருளுக்கு இணையான சக்தி கொண்ட ஒரு வெடிகுண்டினாலேயே அந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் மத்திய பாதுகாப்பு துறையின் தலைவர் அலெக்ஸாண்டர் பார்ட்னிகோவ் அதிபர் விளாடிமிர் புடினிடம் தெரிவித்துள்ளார்.
-
ஆஸி. மண்ணில் 112 வருடங்களுக்கு பிறகு பெறப்பட்ட சாதனை!
AF-90 பேர்த்: அவுஸ்திரேலிய மண்ணில் 112 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதை நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ரோஸ் டெய்லர் நடத்திக்காண்பித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் 2வது டெஸ்ட் போட்டி பேர்த் நகரிலுள்ள வகா ஸ்டேடியத்தில் இடம்பெற்றது. நியூசிலாந்து, அணியின் ரோஸ் டெய்லர் எடுத்த 290 ஓட்டங்கள் உதவியோடு நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 624 ரன்களை குவித்தது.
-
ஜனாஸா அறிவித்தல்: பிரபல இஸ்லாமிய பாடகர் நசுருதீன் வாவா காலமானார்
அக்கரைப்பற்று: அக்கரைபற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி வானொலி இஸ்லாமிய கீத பாடகர் நசுருதீன் வாவா, இன்று (2015.11.17) கொழும்பு வெலிசறை வைத்திய சாலையில் காலமானார். இவர் தேசிய மீலாத் விழா மற்றும் தேசிய காலாசார விழாக்களில் பல தேசிய விருதுகளையும் பெற்று உள்ளார்.
-
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பு செலயாளராக ஒலுவில் நபீல் அமானுல்லா நியமனம்…!
சப்னி அம்பாறை: கிழக்கு மாகான சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளராக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் நபீல் அமானுல்லா இன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (17) கிழக்கு மாகான சுகாதார சுதேச வைத்திய அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
-
இரண்டாயிரம் பேருக்கு இரட்டை பிரஜா உரிமை
கொழும்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 2,000 இலங்கையருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நிகழ்வு இன்று (17) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றது. வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளை மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும், நல்லிணக்கத் திட்டம் என்ற தொனிப்பொருளில் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றுள்ளோருக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கப்பட்டது.
-
முஸ்லிம் அல்லாதோர் சகலரும் காஃபிர்கள் என்றோ முஷ்ரிக்குகள் என்றோ பொதுப்படையாக கூறுவது தவறாகும்
ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் (அல்-குரான் ஏனைய சமூகங்களின் மொழிகளில் மொழியாக்கம் செய்கின்ற பொழுது ஷிர்கு, குப்ரு, ஜிஹாது போன்ற வசனங்கள் அவை பிரயோகிக்கப்பட்டுள்ள கால சூழ்நிலைகள் என்பவை குறித்த சரியான தெளிவுகள் கட்டாயமாகும்) இஸ்லாமியத் தூது முறையாக எத்திவைக்கப்பட்ட பின்னர் அதனை நிராகரிப்போர்களையே “காபிஃர்” என்ற பதம் குறிக்கின்றது, அதேபோன்றே அல்லாஹ்வை அறிந்து கொண்டே அவனுக்கு இணையாக, நிகராக வேறு ஏதேனும் ஒரு சக்தியை அங்கீகரித்து வழிபடுவதே “ஷிர்க்” ஆகும்.
-
பிரதி அமைச்சர் ஹரீஸின் மூத்த சகோதரர் காலமானார்
கொழும்பு: பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் மூத்த சகோதரர் ஹபீப் முஹம்மது இஸ்ஸதீன் இன்று காலை திடீர் சுகயீனமுற்று களுவோவில வைத்தியசாலையில் வபாத்தானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). இவர் சாய்ந்தமருதில் திருமணமாகி தற்போது கொழும்பு களுவோவிலவில் வசித்து வந்தவர்.
-
புதைந்துகிடக்கும் பரிஸ் தாக்குதல்களின் பின்னணிகள்…
பரிஸ்: பரிஸ் நகர தாக்குதல் உலகின் பல பாகங்களையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன் வரலாற்றில் அன்றைய தினம் கறுப்பு வெள்ளியாக பதிவானதுடன் தாக்குதலாளிகளின் திட்டம் நிறைவேறினாலும் பிரதான இலக்கு தவறியமை குறிப்பிடத்தக்கது. அரபு நாடுகளில் மேற்குலக நாடுகள் போர் தொடுப்பதும் தொடுத்துக்கொண்டிருப்பதும் யாவரும் நன்கறிந்த விடயம். அதனது தாக்கமே பரிஸ் நகரை தீவிரவாதிகள் இலக்கு வைக்க பிரதான காரணம் எனலாம்.
-
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம்
கொழும்பு: கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி காலை 09.00 மணிக்கு கொழும்பு – 07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.