- முகம்மட் சஜீ
காத்தான்குடி: புதிதாக நடத்தபட இருகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காத்தான்குடி நகர சபை க்கு தேர்தல் தனியாக நடத்த படுகின்ற பொழுது 12 வட்டாரங்களாக பிரிக்கபடவேண்டும் என்ற ஒரு பிரேரணை முன்னர் வைத்து இருந்தோம். இருப்பினும் கடந்த நூறுநாள் திட்டத்தில் காத்தான்குடி 10 வட்டாரமாக குறைக்கப்பட்டு 10 வட்டாரமாக இப்பொழுது வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அந்த அடிப்படையிலே நாங்கள் காத்தான்குடி நகர சபை 12 வட்டாரங்களாக பிரிக்க படவேண்டும் என்ற பிரேரணையை மக்களின்அடிப்படையில் முன்வைத்து இருக்கிறோம்.இது கடந்த ஆட்சியிலே அங்கீகரிக்கப்பட்ட போதிலும் நூறுநாள் திட்டத்தில்அமைச்சர் கரு ஜெயசூரிய அவர்கள் இறுதி தீர்மானம் எடுத்து அது 10 வட்டாரமாக குறைக்கப்பட்டுள்ளது .
மீண்டும் இதனை 12 வட்டாரமாக பிரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இன்று நான் முன் வைத்துளேன் . இவ்வாறு தனது அறிக்கையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார் .

Leave a comment