Category: Your Kattankudy
-
சமூக இனையதளங்களில் வரும் செய்தி அப்பட்டமான பொய், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறுப்பு
காத்தான்குடி: றிசானா நபீகின் மரணம் நடந்த அந்த நாட்களில், அந்த குடும்பத்துக்கு வழங்குவதற்காக சவுதி அரசாங்கமோ வேறு எந்த அரசாங்கமோ எந்த ஒரு சதத்தையும் வழங்க வில்லை என்பதை மிக தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
-
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகரித்த வெப்பநிலை
லண்டன்: இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகரித்த வெப்பநிலை உணரப்படுகின்றது. அமெரிக்கா தொடங்கி ரஷ்யா வரை மக்கள் கோட், தொப்பி போன்ற குளிர் ஆடைகளை தவிர்த்து,பெரும்பாலும் கோடைகாலத்தில் அணியக்கூடிய டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்துகொள்வதை காணமுடிகின்றது.
-
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை நிகழ்வும்
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பல வருடகாலம் சேவை செய்து இடம்மாறிச்சென்ற இளைப்பாறிய வேலையை விட்டு விலகிய உத்தியோகத்தர்கள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான உத்தியோகத்தரின் பிள்ளைகளுக்கு கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
-
சம்மேளனத்தின் தீர்மானத்தினை மீறி கையொப்பமிட்டு துண்டுப்பிரசுரம் வழங்கிய உலமாக்களது பெயர் விபரங்கள்
01. மௌலவி MHM மன்சூர் (பலாஹி) பேஷ் இமாம் – அன்வர் மஸ்ஜித், ஏத்துக்கால் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி. 02. மௌலவி HM ஷாஜஹான் (பலாஹி) பேஷ் இமாம் – றஹ்மா பள்ளிவாயல், காத்தான்குடி. இஸ்லாம் பாட ஆசிரியர் – தேசிய பாடசாலை, காத்தான்குடி. பரிசோதகர் – குர்ஆன் மத்றஸாக்கள் அபிவிருத்திச் சபை, காத்தான்குடி.
-
விமர்சனங்களுக்கு அஞ்சாத ஜனாதிபதியின் மகள்!
கொழும்பு: சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஒழுங்கு செய்துள்ள நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வின்போது திணைக்கள அலுவலர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 202 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. அத்துடன் சிவில் பாதுகாப்பு திணைக்கள அலுவலர்களுக்கு கணனிகள் உட்பட்ட பொருட்களும் கையளிக்கப்படவுள்ளன.
-
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்குரிய அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் – கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்
எம்.எச்.எம். அன்வர் |காத்தான்குடி: 60,000 சனத்தொகையைக்கொண்ட காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஆதார வைத்தியசாலைக்குரிய ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை போன்ற அனைத்தும் எதிர்காலத்தில் நிறைவேற்றித்தருவேன்” இவ்வாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் நேற்று 24.12.2015 ஆதார வைத்தியசாலை தொடர்பாக வருகை தந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
-
‘மதீனாச்சாசனம்’ பல்லின சமூகத்துக்கான சமத்துவத்தை உணர்த்துகிறது
கொழும்பு: முஹம்மது நபியவர்களின் மதீனாச்சாசனம் பல்லின சமூகத்துக்கான சமத்துவ நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன மீலாத் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் வாழும் தமது சகோதர முஸ்லிம்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம்களும் பேருவகையுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
-
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மலிங்க விளையாடமாட்டார்
கொழும்பு: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. மலிங்கா முழங்கால் வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதால் நியூசிலாந்து எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அணியின் மேலாளர் ஜெரி வோயுட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
-
மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம்
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
-
ஜேர்மனிக்கு விசா பெறுவதற்காக சென்னை வரும் சிரியர்கள்
சென்னை: சிரியாவில் கடும் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், சிரிய நாட்டவர்கள் ஜேர்மனிக்குச் செல்வதற்கு விசா பெறுவதற்காக தமிழகத்தின் சென்னைக்கு வந்துசெல்வது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.சிரியாவில் போர் தீவிரமடைந்த பின்னர், அங்கிருந்து தப்பி கடல் வழியாக ஜேர்மனி சென்று, அகதித் தஞ்சம் பெற்றுள்ள ஆண்களின் குடும்பத்தினரே தற்போது விசா பெறுவதற்காக சென்னையில் காத்திருக்கின்றனர்.