சமூக இனையதளங்களில் வரும் செய்தி அப்பட்டமான பொய், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மறுப்பு

hizbullahகாத்தான்குடி: றிசானா நபீகின் மரணம் நடந்த அந்த நாட்களில், அந்த குடும்பத்துக்கு வழங்குவதற்காக சவுதி அரசாங்கமோ வேறு எந்த அரசாங்கமோ எந்த ஒரு சதத்தையும் வழங்க வில்லை என்பதை மிக தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

அந்த நேரங்களில் என்னோடு தங்கி இருந்த எனது நண்பர் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு சகோதரர் அஷ்ஷைக் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸித் என்ற சகோதரர், நண்பர். இந்த செய்தியை கேள்வியுற்றவுடன் அந்த குடும்பத்துக்கு வழங்குமாறு எங்களுக்கு பத்து இலட்சம் ரூபா நிதியை வழங்கினார். அந்த நிதியை நாம் அந்த குடும்பத்துக்கு வழங்குவதற்காக ஒரு தகவலை அனுப்பினோம். அங்குள்ள பிரதேச சபை உருப்பினர் மற்றும் அங்குள்ள முக்கிய சகோதரர்கள் ஊடாக அந்த நிதியை வந்து ஒப்படைப்பதற்காக தகவலை அனுப்பினோம்.

என்னால் இப்படி ஒரு நிதி வழங்கப்பட்ட செய்தி வந்தவுடன், சவுதி அரேபியாவில் இருந்து நிதியை நாம் பெற்றுக் கொள்வதில்லை என்று அவருடை தாயார் பத்திரிகைகளிளே அரிக்கை விட்டிருந்தார், ஆகவே தான் அந்த நிதியை கொண்டு வந்து தருவதற்க்கு அனுமதி தருமாறும், அவர்கள் றிசானாவுக்காக ஒரு வீடு கட்டுவதாக கேள்விப்பட்டோம், அந்த வீடு கட்டுவதற்காக இந்த நிதியை பயன் படுத்துமாறு, மூதூர் பிரதேச சபை உருப்பினர் மூதூர் பிரதேச முக்கியஸ்தர்கள் ஊடாக தகவல்களை அனுப்பி இருந்தோம்.

இருந்தாலும் றிசானாவின் தாயார் தனது மகளை கொலை செய்த சவூதி அரேபிய நாட்டுடைய அல்லது அங்குள்ள தவந்தர்களுடைய ஒரு சதம் கூட தேவை இல்லை, என்று திருப்பி அனுப்பி வைத்தார்.

மீண்டும் சில நாட்களுக்கு பின் திரும்பவும் அந்த செய்தியை அனுப்பினோம். ஆனால் அவர் இவ்வாறான ஒரு நிதியும் தேவை இல்லை என்று அந்த நிதியை எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

அதன் பின் அந்த நிதியை வழங்கிய அஷ்ஷைக் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸி சவுதி அரேபிய ரியாத் நகரை சேர்ந்தவர். அவர்களோடு தொடர்பு கொண்டு இப்படி நிதியை வேண்டாம் என்று கூரினால் கவலை அடைவார், இருந்த போதும் மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டு இந்த சூழ் நிலையிலே வீடு ஒன்று வேறு ஒரு நிருவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்டு விட்டது, ஆகவே அந்த நிதி அவர்களுக்கு தேவை இல்லை என்று கூறி நிதியை என்ன செய்வது என்று கேட்ட போது, நாங்கள் மட்டக்களப்பில் செய்து கொண்டு இருக்கும் வேறு தேவைகளுக்கும் வேறு பிரதேசங்கள், மாவட்டங்களில் எங்களது நிருவனம் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும், கிணறு தேவைகளுக்கும் அந்த நிதியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அந்த அடிப்படையிலே அந்த நிதியை நாங்கள் வேறு பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்தினோம்’ என்பதை மிக தெழிவாக சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

ஆகவே சவுதி அரசாங்கமோ அல்லது சவுதி தூதரகமோ, வேறு யாரும் எங்களுக்கு ஒரு சதத்தையும் தரவில்லை என்பதை மிக தெளிவாக சொல்லி வைப்பதோடு, இப்பொழுது சிலர் வேண்டும் என்று இப்படியான கதைகளை கட்டி விட்டு செய்கிறார்கள்’ என்பதை மிக தெளிவாக சொல்லி வைக்க விரும்புகிறோம்.
இப்படியான விடயங்கள் அப்பட்டமான பொய் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

  • Muhammad Hamza Kaleel

Published by

Leave a comment