Category: Your Kattankudy
-
கிழக்கில் மாபெரும் “முற்றத்து முகவரிகளின் முப்பெரு விழா”…! (அழைப்பு)
சப்னி அம்பாறை: அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “முற்றத்து முகவரிகளின் முப்பெரு விழா ” எதிர்வரும் ஞாயிறு அதாவது 2015.12.27 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பேரவையின் தலைவர் தேசமான்ய ஜலீல் ஜி அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
-
காத்தான்குடி மையவாடிகள் யாரின் சொத்து?
காத்தான்குடி: பள்ளிவாயல்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களால் பேணிப்பாதுகாக்கப்பட்டு கண்ணியத்தோடு நடாத்தப்படுகின்ற ஒரு இடமாக மையவாடிகளே காணப்படுகின்றன. எல்லா மதத்தவர்களும் தங்களது அடக்கஸ்தலங்களை பேணிப் பாதுகாப்பதில் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். ஆனால் காத்தான்குடியில் மையவாடிகளின் நிலமையானது வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது.
-
2015 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பட்டிருப்பு கல்வி வலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: செலிங்கோ லைப் ஆயூட் காப்புறுதி நிறுவனத்தின் களுவாஞ்சிக்குடி கிளையின் ஏற்பாட்டில் 2015 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பட்டிருப்பு கல்வி வலய மாணவர்களை கௌரவிக்கும் முதற்கட்ட நிகழ்வு 22-12-2015 நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு செலிங்கோ லைப் ஆயூட் காப்புறுதி நிறுவனத்தில் இடம்பெற்றது.
-
நல்லாட்சியில் இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் அத்தாட்சிகள் அங்கீகரிக்கப் படுவதில்லையாம்!
மஸிஹுதீன் இனாமுல்லாஹ் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,அதிகாரிகள் அசமந்தம். எனது பிள்ளைகளுக்கு, சகோதரர்களுக்கு கைகொடுக்க யாருமே இல்லையா? இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அறபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார் பிரிவு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது என பல பட்டதாரி மாணவர்கள் கண்கலங்கி முறையிடுகின்றார்கள்.
-
ஹிருணிக்காவின் ஆதரவாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கொழும்பு: ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பாதுகாப்பு வாகனம் ஒன்றை பயன்படுத்தி நபர் ஒருவரை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது 6 ஆதரவாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலீசார் அவர்களை அடையாள அணிவகுப்பொன்றில் நிறுத்துவதற்கு அனுமதி தருமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
-
சவுதியில் இலங்கைப் பெண்ணை ‘கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை ரத்து’
றியாத்: சவுதி அரேபியாவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண், அந்தத் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.அவரது தண்டனை சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் துணை வெளியுறவு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் கருணை மனு சவுதி அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
-
கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு சில மருந்தகங்களில் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்- பிரதியமைச்சர் அமீர் அலி
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்குடா: ‘கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு சில மருந்தகங்களில் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு வித்துக் கொண்டு இருக்கிறார்கள்’ என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார்.
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின்- தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 5வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 35வது சமூகத்தை நோக்கிய பயணத்தில் வறிய பெற்றோரை இழந்த மற்றும் வலது குறைந்த தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கும் நிகழ்வு நாளை 24-12-2015 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
-
தமிழ்நாட்டுக்கு 26000 கோடி தேவை: மோடியிடம் ஜெயலலிதா கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள 25,912 கோடி ரூபாய் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் செவ்வாயன்று எழுதியிருக்கும் கடிதத்தில், தமிழகத்தில் பெய்த மழை வெள்ளத்தின் காரணமாக, மாநிலத்தின் உள்கட்டமைப்பிற்குக் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.