Category: Your Kattankudy
-
கல்முனை கல்வி வலயத்தில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு
ஹாசிப் யாஸீன் கல்முனை: 2015 ஆம் ஆண்டு கல்முனை கல்வி வலயத்தில் தேசிய மற்றும் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் திறமை காட்டி சாதனை படைத்த மாணவ வீர வீராங்கணைகளையும், விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலையின் நல்லதம்பி கூட்ட மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றது.
-
பிரிட்டனில் முஸ்லிம் பெண்கள் ஆங்கிலம் கற்க கூடுதல் நிதி: எதிர்கால இருக்கைக்கு கட்டாயமாகிறது ஆங்கில மொழி
லண்டன்: பிரிட்டனில் வாழும் முஸ்லிம் பெண்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக 28 மில்லியன் டொலருக்கும் அதிக நிதியை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒதுக்கவுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும், மேலும் ஒத்திசைவான சமூகம் ஒன்றை உருவாக்கவும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
-
சவாலை ஏற்று தனது வீட்டிற்கு ரயிலில் பயணித்த அமைச்சர் சுஜீவ
கொழும்பு: கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற பொருளாதார உச்சிமாநாட்டில் விடுக்கபட்ட சவாலை சர்வதேச வர்த்தக இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நிறைவேற்றியுள்ளார். இந்த மாநாட்டில் எதிர்கால இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. நாட்டின் அபிவிருத்திக்கு முக்கிமாக போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
-
ஆட்ட நிர்ணய சதி; வாக்குமூலம் வழங்க மெத்திவ்ஸ் இன்று வரவில்லை
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவரை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுத்த முயன்றதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி பிரிவில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்க இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் இன்றைய தினம் (18) அழைக்கப்பட்டிருந்தார்.
-
ஈமானிய உணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு
முஹம்மது நியாஸ் இஸ்லாமிய ஷரீஆவில் விபச்சாரிகளுக்கு கல்லெறி தண்டனை வழங்குவது தொடர்பாக ஒரு தொடர் கட்டுரை எழுதி வருகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்கட்டுரைக்கான மேற்கோள்களை சேகரிப்பதற்காக ஸஹீஹ் முஸ்லிம் என்னும் நபிமொழிக்கிரந்தத்தை புரட்டிக்கொண்டிருக்கும்போது கீழுள்ள இந்த சம்பவத்தை வாசிக்க நேர்ந்தது. இந்த வரலாறை மார்க்க அறிஞர்கள் பலருடைய சொற்பொழிவுகளின் வாயிலாக செவியேற்றிருந்தாலும் கூட உணர்வு ரீதியாக ஒரு உள்ளச்சத்துடன் வாசித்தபோது உறுப்புக்களும் உணர்வுகளும் சில நிமிடங்கள் உறைந்துதான் போயின.
-
“கிழக்கு மாகாண ஆட்டோ சாரதிகளுக்கு அநீதியிழைக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது”
NFGG காத்தான்குடி: “எந்தவொரு அரச நிர்வாக கட்டமைப்பும் பொது மக்களிடமிருந்து வரிகளை அறவிடும் போது அதற்கு பகரமாக பெறுமதியான சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும். அந்த வகையில் மேலதிக எந்த சேவைகளையும் வழங்காமலும், வேறு எந்த நியாயங்களுமின்றியும் கிழக்கு மாகாண ஆட்டோ சாரதிகளிடமிருந்து மேலதிக வரியினை அறவிடுவதற்கு கிழக்கு மாகாண சபை தீர்மானித்திருப்பதானது எற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இவ்வாறு அநீதி இழைக்கப்படுவதனை ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின்…
-
“நல்லாட்ட்சி என்பதற்கு பதிலாக நழுவல் ஆட்சியே இடம்பெறுகின்றது”- ஹுனைஸ் பாரூக் (காணொளி)
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் கொழும்பு: கடந்த மஹிந்த ராஜபக்ஸ்சவின் அரசாங்கத்தின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிகையின்மையினை அடிப்படையாக வைத்து முதன்லாக இந்த நாட்டில் அரசாங்கம் மாற்றப்பட்டு நல்லாட்சியானது ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முதன் முதலில் முஸ்லிம்பாரளுமன்ற பிரதிநிதிகளில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணிக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் இந்த நாட்டில் தற்பொழுது நல்லாட்சி என்ற பெயரில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற ஆட்சியானது எனது பார்வையில் நழுவல் ஆட்சியாகவே தென்படுக்கின்றது என முன்னாள் மன்னர் மாவட்டத்து அகில இலங்கை…
-
கள்ளக் கடத்தல்
எஸ். எச். எம். ரிஸ்வி LL.B, AAL கள்ளக் கடத்தல் வியாபாரம் இஸ்லாத்தின் பார்வையில் ஆகுமாக்கப்பட்ட ஒன்றா என்ற விவாதாம் இன்று சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ள நிலையில் சில உலமாக்கள் இவ்வியாபாரம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளார்கள். இவர்கள் அரசினால் விதிக்கப்படும் வரியை மாத்திரம் காரணம் காட்டி அத்தகைய வரி விதிப்புக்கள் இஸ்லாத்தில் இல்லை, ஆகவே கள்ளக் கடத்தல் வியாபாரத்திற்கு இஸ்லாத்தில் தடை இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் கள்ளக் கடத்தல் வியாபாரத்தின் மூலம்…
-
முஹாசபா வின் 4ஆவது பிரசுரம் அந் நிஸா சகோதரிகளால் வெளியீடு
காத்தான்குடி: முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது “தூய தேசத்தை நோக்கிய பயணத்தின்” 04 ஆவது வெளியீடான ” பாத்திமாக்களே உங்களுக்குத்தான் ” பிரசுரம் இன்று (17.01.2016) ஞாயிறன்று முஹாசபா அந் நிஸா மகளீர் குழு சகோதரிகளால் விநியோகம் செய்யப்பட்டது.
-
நாளை நமதே
அபூ சுஹா இலங்கை முஸ்லிம்களின் எதிரகாலம் தொடர்பில் நம்பகத்தன்மையுடன் நடக்கக் கூடிய கட்சியொன்றின் தேவைப்பாடு உணரப்பட்டு இன்றுடன் பலவருடங்கள் உருண்டோடியுள்ள நிலையில் புதிய கட்சியினை ஏற்படுத்தி அதனை சமூகத்திற்காக விதைப்பது என்பது நீண்ட காலமொன்றினை எடுக்கும் என்பது யதார்த்த்தின் உண்மையாகும்.
-
இரத்தினபுரி நீல மாணிக்கத்தைப் பின்தள்ளி உலக சாதனை படைத்த பொலன்னறுவை நீலமாணிக்கம்!
கொழும்பு: உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் எனும் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அண்மையில், இச்சாதனைக்குரிய நீல மாணிக்கக்கல் இரத்தினபுரி நகரின் அகழ்வொன்றிலிருந்து பெறப்பட்ட நிலையில், அச்சாதனை மீண்டும் இலங்கையினாலேயே முறியடிக்கப்பட்டுள்ளது. தற்போது பெறப்பட்டுள்ள நீல மாணிக்கம் 2476.66 கரட்களைக் கொண்டுள்ளதோடு, இது 486 கிராம்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
தங்கம் கடத்துவது தொடர்பில் அஸ்பர் மௌலவி தெரிவித்த(?) கருத்துக்கள் தொடர்பாக…
முஹம்மது நியாஸ் தங்கம் கடத்துவது இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டதா என்னும் தொனியில் அமைந்த ஒரு வாதப்பிரதிவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் அலைமோதிவருவதை நாம் காண்கிறோம். நேற்றையதினம் அதாவது 15: 01: 2016 காத்தான்குடி குபா ஜும்மா பள்ளிவாயிலில் மௌலவி BM. அஸ்பர் (பலாஹி) தெரிவித்ததாக கூறப்படுகின்ற கருத்துக்களை மேற்கோள்காட்டி இந்த வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளதை உணரக்கூடியதாக இருக்கிறது.