Category: Your Kattankudy
-
காத்தான்குடி மீடியா போரத்திற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு
எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்திற்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பொன்று கி.பி. காசிம் வீதியிலுள்ள NFGG காரியாலயத்தில் அதன் தலைவர் MM. அப்துர்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது. காத்தான்குடி வைத்தியசாலை தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இச்சந்திப்பு இடம்பெற்றதுடன் வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் அதனை எவ்வாறான முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வது என்ற விரிவான கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது.
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படும் CT ஸ்கேன் இயந்திரம்- நோயாளிகள் பெரிதும் அவதி
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக இயங்கிவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் இயந்திரம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுவதாகவும் ,இதனால் நோயாளிகள் பெரிதும் அவஸ்தைப் படுவதாகவும் இது குறித்து சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள்,அரசியல் வாதிகள் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
-
முஹாசபா மீடியா நெட்வொர்க் இனது 2 வது சிரமதான நிகழ்வு
காத்தான்குடி: முஹாசபா மீடியா நெட்வொர்க் இன் 2வது சிரமதான நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15/01/2015) காத்தான்குடி டீன் வீதியில் உள்ள ஸாஹிரா வலது குறைந்தோர் பாடசாலையில் சிரமதானம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
ஊடகவியலாளர்களுக்கான 3 நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான உடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, முதலுதவிப் பயிற்சி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான மூன்று நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை கடந்த 8 வெள்ளிக்கிழமை தொடக்கம் கடந்த 10 ஞாயிற்றுக்கிழமை வரை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.
-
பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன நிறுத்தம்
கொழும்பு: பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன பாராளுமன்றில் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறித்த வரிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பட்டதாரிகளை மாவட்டத்திற்குள் நியமிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை
ஹாசிப் யாஸீன் அம்பாறை: பயிலுநர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கொழும்பு பிரதேசத்தில் நியமிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை சொந்த மாவட்டத்தில் நியமிக்க விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
-
காத்தான்குடியின் மூத்தோர்கள் மொழி
உள்ளூட்டுக்க நிண்டு ஒள்ளுப்பம் வாங்க எண்டு பொஞ்சாதி கூப்பிட புருசன் வந்தான். ஆல ஊட்டு மூலைக்க அசவில மேல மெத்தப் பாயொன்று சுத்தி இருக்கிறது.
-
ஈரானிய கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டனர்
தெஹ்ரான்: ஈரானிய கடற்பரப்பில் நுழைத்ததற்காக கைது செய்யப்பட்ட 10 அமெரிக்க மாலுமிகளை தாம் விடுவித்துள்ளதாக தற்போது ஈரானிய அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது. அமெரிக்காவிடம் இருந்து இந்தச் சம்பவம் தொடர்பாக தம்மிடம் மன்னிப்பு கோரப்பட்டதாக ஈரான் முன்னதாக அறிவித்திருந்தது.
-
புதிய அரசியலமைப்புக்கு மஹிந்தவின் ஆதரவு அவசியம்: ஆர்.சம்பந்தன்
கொழும்பு: ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு முக்கியமானது என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.புதிய அரசியலமைப்பு ஏற்படுத்துவது தொடர்பில், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட யோசனை பற்றிய விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
-
தேர்தலோட போனவங்க அடுத்த தேர்தலுக்கு வந்திருக்காக
இர்ஷாட் ஏ. காதர் காத்தான்குடி: கடந்த பொதுத்தேர்தலுடன் ஊரைவிட்டுச் சென்ற “நல்லாட்சிக்காரங்க” அடுத்த தேர்தல் எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் மீண்டும் ஊருக்குத் திரும்பியிருக்காங்க. நல்லாட்சியின் ஒருவருட பூர்த்தியை பயன்படுத்தி ஊருக்குள் நுழைந்திருக்கும் இவ்வியக்கத்தின் அறிக்கைகள் தற்பொழுது ஊடகங்களில் வழமைபோன்று வெளிவருவதையும் காணமுடிகிறது.
-
கிழக்கு மாகாண அரசிற்கு உட்பட்ட பாடசாலைகளில் தளபாடங்கள் பற்றாக்குறை
கிழக்கு மாகாண அரசிற்கு உற்பட்ட பாடசாலைகளில் தளபாடங்கள் பற்றாக்குறையாக இருந்து வருகின்றது. இதனால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அசௌகரியங்களை அனுபவித்து வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் வேதனைப்படுகின்றார்கள்.