Category: Your Kattankudy
-
அரச சேவையில் 40வருடங்கள் சேவையாற்றி நாளை ஒய்வுபெறும் மாத்தளை அப்துல் றசாக்
பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை நகரை பிறப்பிடமாகவும் காத்தான்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செய்யிது அஹமது அப்துல் றசாக் இலங்கை அரச சேவையில் 40 வருட காலம் சிறப்பாக பணியாற்றி நாளை 17-05-2016 ஒய்வு பெறவுள்ளார். 1956-05-18
-
வீதி விபத்துக்களை குறைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை
– M.T. ஹைதர் அலி காத்தான்குடி: முப்பது வருட யுத்தகாலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்கு பின்னர் அதிகமான மரணங்கள் வீதி விபத்துக்களாலே ஏற்படுகின்றன என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். அந்த வகையில் அண்மைக் காலமாக காத்தான்குடி நகரம் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெறும் நகரமாக மாற்றமடைந்து வருகின்றது.
-
துய்யோன் எழுதிய “ஒரு பூ மீண்டும் மலர்கிறது” நாவல் வெளியீட்டு விழா
எம்.எஸ்.எம். சாஹிர் கொழும்பு: எதிர்வரும் 19ஆம் திகதி வியாழன் பி.ப 04 மணிக்கு மருதானை தெமட்டக்கொட வீதி வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில், “ஒரு பூ மீண்டும் மலர்கிறது” நாவல் நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
-
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 9 பேர் பலி!
கொழும்பு: சீரற்ற காலநிலை காரணமாக இது வரை 9 பேர் பலியாகியுள்ளதாகவும், 10 பேரை காணவில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. காலி, பொத்தல பகுதியில் மின்சார கம்பி வீழ்ந்ததனால் இருவர் (02) பலியானதோடு, அவிஸ்ஸாவளை பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்துவீழ்ந்ததில் இருவர் (02) மரணமடைந்ததோடு சிறுமி ஒருவரை (01) காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கட்டுநாயக்கா வந்த மூன்று விமானங்கள் திருப்பி அனுப்பி வைப்பு
கொழும்பு: சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு இருந்த மூன்று விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டன என்று விமான நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மக்களுக்கு தேவைகள் இருக்கின்ற இடத்தில்தான் சேவைகளைச் செய்ய வேண்டும்! மட்டக்களப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ
புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் மட்டக்களப்பு: மக்களுக்கு தேவைகள் இருக்கின்ற இடத்தில்தான் சேவைகளைச் செய்ய வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு முடிவடைவதற்குள் மேலும் இவ்வாறான 10 எழுச்சிக் கிராமங்களை உருவாக்கி வறிய மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸ தெரிவித்தார்.
-
களத்தில் குதித்தார் சிப்லி
காத்தான்குடி: கடந்த இரு நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல வீதிகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதோடு, அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2016.05.08ஆந்திகதி (இன்று) காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் நேரில் சென்று பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் மக்களின் நலன்கருதி அவசரமாக செப்பனிடப்பட வேண்டிய வீதிகளையும் அடையாளம் கண்டுகொண்டதோடு, இவ்வீதிகளை புணரமைப்பதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை…
-
முஸ்லிம்களிடமிருந்து பறிபோயுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை மீட்டெடுப்பது எவ்வாறு?
முஸ்லிம்களுக்கென்று இருக்கின்ற ஒரே ஒரு அரச பல்கலைக்கழகமென்று நாங்கள் பெருமை பட்டுக்கொண்டிருக்கும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டவகையில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டு வருவதனை முஸ்லிம் கல்வி சமூகத்தினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலை தருகின்றது.
-
“இளவயது திருமணங்கள் முஸ்லிம் பெண்களை மிகவும் பாதிக்கிறது”
கொழும்பு: இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அவர்கள் சமூக மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர் என புதிய ஆய்வொன்றில் கண்டறிப்பட்டுள்ளது. குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது, முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வை மேற்கொண்டவரும் பெண்ணியல் சட்டத்தரனியுமான ஹஸானா சேகு இஸத்தீன் தெரிவித்துள்ளார்.
-
அரசியல் காழ்ப்புணர்சிக்கு காத்தான்குடி தள வைத்தியசாலை அமைந்துள்ள இடம் ஒரு மிகப்பெரும் உதாரணம்
காத்தான்குடி: மக்களுடைய நலன்களைக் கருதாது தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்ளவும் தங்களுடைய சுய நலன்சார் அரசியலை மேற்கொள்வதற்காகவும் நல்ல விடயங்களைக் கூட எதிர்த்து ஒரு சிலரால் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கைகளால் பொதுமக்கள் எந்தளவு பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கான இடமே இன்று காத்தான்குடி தள வைத்தியசாலை அமைந்திருக்கும் இடமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
-
கர்பலா – பாலமுனை வீதியைப் புனரமைத்ததில் NFGGயின் எந்த முயற்சியும் கிடையாது!- காத்தான்குடி ஐ.தே.க. மத்திய குழு விபரிப்பு!
புவி எம்.ஐ. ரஹ்மதுல்லாஹ் காத்தான்குடி: காத்தான்குடி கர்பலா – பாலமுனை வீதியைப் புனரமைப்புச் செய்ததில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எனப்படும் NFGG எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை என நேற்று (13.05.2016) மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி கொத்தணிக் கிளை முக்கியஸ்தர்களுக்கான விஷேட அவசரக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
இரு ஆசிரியர்கள் மாணவிகள் மீது பாலியல் சேட்டை காத்தான்குடியில் சம்பவம்..!!
ஜுனைட். எம்.பஹ்த் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடியில் உள்ள பிரபல முஸ்லிம் மகளீர் பாடசாலையில் கல்விகற்பிக்கும் இரு ஆசிரியர்களால் அதே பாடசாலையில் கல்வி பயிலும் சாதாரண தர வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்ததாக தெறிவிக்கப்பட்டுள்ளது.