Category: Your Kattankudy
-
உலகின் பெரும்பாலான மக்கள் நாளை ரமழான் நோன்பு நோற்கின்றனர்
சிட்னி: அவுஸ்திரேலியா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நாளை ரமழான நோன்பை மக்கள் நோற்கின்றனர். ஐரோப்பாவில் இன்னும் மாலை நேரமாகாததால் அங்கு உத்தியோகபூர்வமாக ரமழான் அறிவிக்கப்படவில்லை. எனினும் சர்வதேச அடிப்படையிலேயே ஐரோப்பிய நாடுகளில் வழமைபோல் நோன்பு நோற்பதால் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலும் நாளை திங்கட்கிழமை அங்குள்ள மக்கள் ரமழான் நோன்பை நோற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மலேசிய MANAGEMENT SCIENCE UNIVERSITY க்கும் BATTICALOA CAMPUS க்கும் இடையில் உடன்படிக்கை
கோலாலம்பூர்: மலேசியாவின் மிகப் பெரிய தனியார் பல்கலைக்கழகமாக விளங்கும் முகாமைத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கும் BATTICALOA CAMPUS க்கும் இடையில் இன்று உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
-
இன்று காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலில் மாபெரும் பிறை தெளிவு மாநாடு
குர்ஆன், சுன்னாவின் நிழலில் பிறை பற்றிய இஸ்லாமிய ஷரீயாவின் வழிகாட்டல் என்ன ? – உள்நாட்டு பிறையே சாத்தியம் என்பதற்கான சான்றுகள் என்ன ? – பிறை விடயத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடு என்ன ?
-
சட்டவிரோத சிறுநீரக விற்பனை: சர்ச்சையில் டில்லி அப்பல்லோ மருத்துவமனை
டில்லி: டில்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் நடப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக டில்லி பொலீஸார் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் ஐந்து பேராவது அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து தங்கள் சொந்த சிறுநீரகங்களை சுமார் 6,000 டொலர்களுக்கு விற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.இது இந்தியாவில் சட்ட விரோதம் என்பதால் போலி ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது.
-
முகமது அலி: “பிறப்பால் பிரிவினை ஏற்படுத்தும் இந்நாட்டிற்காக நான் வாங்கி வந்த பதக்கத்தை நான் அணிய விரும்பவில்லை”
AF-90 நியுயோர்க்: 1942ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக்காவின் கென்டகி நகரில் பிறந்தார் கோசியஸ் மார்செலஸ் கிளே என்பதுதான் முகமது அலியின் இயற்பெயர். சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போல் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் செல்லாமல் பேருந்துடன் ஓடியே முகமது அலி பள்ளிக்கு செல்வாராம். முகமது அலி குத்துச்சண்டையை தேடிப் போகவில்லை. அது அவரது ரத்ததிலேயே ஊறியிருந்தது. அலியின் 12வது வயதில் அவரது சைக்கிளை ஒருவன் திருட முயற்சிக்க, அவனைப் பிடித்து சரமாரியாகக் குத்தி சாய்த்தார். அவரது…
-
கட்டுநாயக்க விமான நிலையம் மூன்று மாதங்களுக்கு மூடப்படுகிறது
கொழும்பு: கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும்.
-
வாகன வரி அதிகரிப்பு! அமைச்சர்களும் எம்.பிக்களும் கடும் ஆட்சேபனை
கொழும்பு: வாகனங்களின் இறக்குமதித் தீர்வையை நிதி அமைச்சு கண்மூடித்தனமாக அதிகரித்தமைக்கு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஒட்டுமொத்தமாக தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கின்றார்கள். திடீரென இந்தத் தீர்வை அதிகரித்தபடியால் எல்லா மட்டங்களில் உள்ளவர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த அசாதாரண நிலை குறித்து தாங்கள் ஜனாதிபதியிடம் முறையிடத் தீர்மானித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
-
அமெரிக்க ராணுவத்தில் சேர மறுத்தவர் முகமது அலி
நியுயோர்க்: முகமது அலி தன்னைத்தானே, ‘மாபெரும் மனிதன்’ என அறிவித்துக் கொண்டார். ”பொக்ஸிங் ரிங்குக்குள் பட்டாம் பூச்சியை போல பறப்பேன், தேனியை போல கொட்டுவேன்” என்பது முகமது அலியின் மிக பிரபலமான வரி. 1964ல் குத்துச்சண்டையில் ஜாம்பவானாக இருந்த சோனி லிஸ்டனை முகமது அலி வீழ்த்தினார்.
-
“தறாவீஹ் 20 தொழுவதை யாராலும் வழிகேடாக நிரூபிக்க முடியாது” காத்தான்குடியில் இடம்பெற்ற தெளிவு மாநாட்டின் ஓடியோ
தராவீஹ் தொழுகையும் அதன் எண்ணிக்கை பற்றிய தெளிவு மாநாடு-2016 தராவீஹ் 20 ரகாஅத் தொழுவது வழிகேடா உரை : அஷ் ஷைக் யஹ்யா (பலாஹி, பின்னூரி) [-அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா பத்வா குழு-] தறாவீஹ் தொழுகையும் அதன் எண்ணிக்கை பற்றியும் மிகவும் தெளிவான விளக்கங்களை அளித்து ரமழான் இரவு தறாவீஹ் தொழுகை அவரவர் எத்தனை ரக்காத்துக்கள் தொழுதாலும் “தறாவீஹ் 20 தொழுவதை யாராலும் வழிகேடாக நிரூபிக்க முடியாது”
-
இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் காத்தான்குடியில் பேரீச்சம்பழ விநியோகம்
எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மனிதாபிமான சக வாழ்வுக்கான பிரிவினூடாக புனித நோன்பினை முன்னிட்டு காத்தான்குடி, காங்கேயனோடை, பாலமுனை, கீச்சான் பள்ளம், ஒல்லிக்குளம், சிகரம், மன்முனை, பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய் மற்றும் தோப்பூர் பிரதேச பள்ளிவாயல்களுக்கான பேரீச்சம்பழ விநியோகம் இடம்பெற்றது.
-
வெலிமடையில் முஸ்லிம் பாடசாலை நிர்மாணிக்க உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு
வெலிமடை: ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள வெலிமடை பகுதியில் முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த புதிய பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. தற்போது வெலிமடை பிரதேச முஸ்லிம் மாணவர்கள் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வெலிமட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.