Author: yourkattankudy.com
-
மிருகங்களை வேட்டையாடி வந்த 13 அடி இராட்சத முதலை ஆரையம்பதி ஆற்றங்கரை கரையோரப்பகுதியில் கண்டுபிடிப்பு
பழுலல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி -1 தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப்பகுதியில் ஆடு, மாடு, நாய் போன்ற மிருகங்களை வேட்டையாடி வந்த 13 அடி இராட்சத முதலையை இறந்த நிலையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய காரியாலய அதிகாரிகளினால் காத்தான்குடி பொலிசாரின் உதவியுடன் 26-01-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
ஐந்தாண்டு அபிவிருத்திட்டம் மட்டக்களப்பு செயலகத்தினால் தயாரிப்பு
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் அமுல்படுத்துவதற்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டமொன்று மாவட்ட செயலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதல்: பெண்ணுக்குத் தீவைத்த வாலிபர் உட்பட இருவரும் கருகி பலி!
– SHM சென்னை: ஒரே நேரத்தில் தன்னுடனும், இன்னொருவருடனும் கள்ளக்காதலில் திளைத்த பெண் மீது ஆத்திரம் கொண்டார் வாலிபர். எவ்வளவு சொல்லியும் அடங்காத அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். அப்போது அந்தப் பெண், தனக்கு தீவைத்த காதலனையும் கட்டிப் பிடித்ததில் இருவருமே தீயில் கருகி பலியானார்கள்.
-
குளியறையில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபோய் அழகி காசன்ட்ரா!
– SHM லொஸ் ஏஞ்சலெஸ்: முன்னாள் பிளேபோய் இதழின் மொடல் அழகி காசன்ட்ரா லின் ஹென்ஸ்லி அதிக அளவிலான போதைப் பொருளை உட்கொண்டதால் மரணமடைந்தார். அவருக்கு வயது 34 ஆகும்.
-
காத்தான்குடியும் தலைக் கவசமும்…
– M-16 காத்தான்குடி: இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் ஊராக காத்தான்குடி திகழ்கிறது. வர்த்தக மற்றும் அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களில் பெரும்பாலான மக்கள் அங்கம் பெறுகின்றனர்.
-
கிழக்கு மாகாண ஆளணி நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு
திருகோணமலை: கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தின் ஆளணி நியமனத்தில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் விவாதிப்பதற்காக தன்னால் அவசர பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் கூறுகின்றார்.
-
‘சிரியா செல்லும் இளம் முஸ்லிம்கள் பிரிட்டனையும் தாக்கலாம்’
லண்டன்: சிரியாவில் போராடுவதற்காக பிரிட்டனிலிருந்து செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்பியதும் பிரிட்டனிலும் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக் கூடும் என்று முன்னணி பிரிட்டிஷ் முஸ்லிம் விவகார அவதானி ஒருவர் கூறியுள்ளார்.
-
‘இண்டர்நெட்’ கடவுளின் பரிசு: போப் பிரான்சிஸ்
– AF-60 வத்திக்கான்: சுலபமாக தொடர்பு கொள்ள வைப்பதன் மூலம் உலகத்தையே குடும்பமாக மாற்றியுள்ள இண்டர்நெட் கடவுள் தந்த பரிசு எனப் பாராட்டியுள்ளார் போப் பிரான்சிஸ்.
-
சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் கால் மூட்டில் நூற்றுக்கணக்கான தங்க ஊசிகள் கண்டுபிடிப்பு
– SHM சியோல்: மூட்டு வலியால் அவதிப்பட்ட தென் கொரியப் பெண் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கால் மூட்டுக்குள் நூற்றுக்கணக்கான தங்க ஊசிகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
-
ஆப்கானில் 5 கிரிக்கட் வீரர்கள் சுட்டுக் கொலை!
– SHM காபூல்: ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழுவினரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சுட்டதில் கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
-
காத்தான்குடியின் கடை நிலவரங்கள்…
M-16 காத்தான்குடி: ஒரு காலத்தில் காத்தான்குடியில் கடை வாங்குவதென்றால், அல்லது வாடகைக்கு பெறுவதென்றால் போட்டி போட்டு பெறும் நிலை காணப்பட்டது. மக்கள் பணத்தை கையில் வைத்துக் கொண்டு கடைகளை வாங்க அல்லது பெற்றுக் கொள்ள முண்டியடித்துக் கொள்வர்.
-
புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கும் வீதி ஊர்வலமும்
பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய புகைத்தல் எதிர்ப்பு வாரத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கும் வீதி ஊர்வலமும் இடம்பெற்றது. இதில் ஜுனைட் நளீமி, மாவட்ட சுகாதர கல்வி அதிகாரி, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும்