Author: yourkattankudy.com
-
‘முஷர்ரப் உதவியுடன் பாகிஸ்தானை சுதந்திரமாக வலம் வந்தார் பின்லாடன்’
– S-90 வாஷிங்டன்: முஷரப்பிற்குத் தெரிந்தே பாகிஸ்தான் முழுவதும் அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் சுதந்திரமாக பயணம் மேற்கொண்டார் என கார்லோட்டா கால் என்ற பெண் பத்திரிக்கையாளர் தனது புத்தகத்தில் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
-
மாயமான விமானம் ஆப்கானிஸ்தானில்-ரஷ்யா
– SHM மொஸ்கோ: மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை என்றும் பாகிஸ்தானில் இருப்பதாகவும் ரஷ்ய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 227 பயணிகள்,1 விமானி, 1 துணை விமானி மற்றும் 10 சிப்பந்திகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது.
-
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது
மிர்பூர்: மழையின் காரணமாக ஆட்டம் தடைபட டக்வர்த் லீவிஸ் முறையிலான கணக்குப்படி இலங்கை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வென்றதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்ததை அடுத்து தனது பட்டத்தை இழக்கிறது.
-
ஊழல் மோசடிகளைத் தடுத்து நிறுத்தக்கோரும் பிரேரணையை காத்தான்குடி நகரசபை நிராகரித்தது
-PMGG யின் ஊடக அறிக்கை- காத்தான்குடி: ஊழல் மோசடிகளைத் தவிர்த்து பொதுச் சொத்துக்கள் மற்றும் பொது நிதிகளை கையாளும் விடயத்தினை அர்த்த பூர்வமாகவும் அர்ப்பணத்துடனும் மேற்கொள்வதற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சமர்பித்த பிரேரனை காத்தான்குடி நகர சபையினால் நிராகரிக்கப்பட்டது.
-
மே மாதம் 6ஆந் திகதி தொடக்கம் 10ஆந் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு – 2014
பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு:மே மாதம் 6ஆந் திகதி தொடக்கம் 10ஆந் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு – 2014, இந்த நாட்டின் இளைஞர்கள் வாழவில் புதிய பாதைகளைத் திறந்து விடும்.
-
‘இணைவைக்கும் ஈமானியர்கள் ‘ என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
‘டெங்கு நோயினை ஒழிப்பதற்கு உங்களால் தான் முடியும்’ தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் ஆரம்பம்
(ரைஸ்) கிண்ணியா: நமது சுற்றுப்புறச் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சு ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
-
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்களின் இரண்டாவது ஒன்று கூடல்.
துபாய்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் எமது காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர்களிடையே எம்ஊர் உறவுகளை அறிமுகம் செய்து அதன் மூலம் நம் சகோதரர்கள் தமக்குள் ஒரு அறிமுகத்தை ஏற்படித்திக் கொள்வதற்காகவும் அவர்களிடையே ஒற்றுமை மற்றும் சமூக உறவை வளர்த்துக் கொள்வதற்காகவும் அல்லாஹ்வின் நாட்டப்படி எமது அனைவரினுடைய முயற்சியினால் நமது முதலாவது ஒன்று கூடலை சிறப்பாக நடாத்தி முடித்தோம் . (அல்ஹம்துலில்லாஹ்)
-
பாகிஸ்தானின் படுதோல்விக்கு தொடக்க வீரர்களே காரணம்: அப்ரிடி
-S-90 இஸ்லாமாபாத்: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளிடம் தோற்று வெளியேற பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள்தான் காரணம் என்று அந்த அணியின் வீரர் ஷகித் அப்ரிடி சாடியுள்ளார்.
-
போருக்குத் தயாராகிறது ரஷ்யா!
மொஸ்கோ: உக்ரைனிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கான தங்களது விருப்பத்தினை ஒரு வாக்கெடுப்பின் மூலம் தெரிவித்த கிரிமியாவை உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. கடந்த மாதம் 21ஆம் தேதியன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது கையெழுத்தின் மூலம் இந்த இணைப்பினை உறுதி செய்தார்.
-
இருபது20 தரவரிசை: இந்தியா முதலிடம்! குசால் பெரேரா பத்து இடங்களுக்குள் முன்னேற்றம்!!
டுபாய்: சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இலங்கையை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி கூடுதலாக ஐந்து புள்ளிகள் பெற்று 115 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியது. அவுஸ்திரேலியா ஐந்து புள்ளிகள் குறைந்து 110 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு பின்தங்கியது.
-
மாயமான விமானத்தில் வழங்கப்பட்ட மங்குஸ்தான் பழத்தில் விஷம்?
-S-90 கோலாலம்பூர்: மலேசிய விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் தடவப்பட்டதா என்று மலேசிய பொலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்திய பெருங்கடலுக்குள் விழுந்ததாக கூறப்படும் மலேசிய விமானம் MH.370-ஐ தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்துள்ளது. இதனால் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புது நம்பிக்கை பிறந்துள்ளது.