Author: yourkattankudy.com
-
க.பொ.த சா-தரப் பரீட்சையில் காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் 9 ஏ நான்கு பேர் – 8 ஏ 1 பி ஆறு பேர் – 8 ஏ 1 சி ஒருவர்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2013 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் 9 ஏ சித்தியும் 6 மாணவர்கள் 8 ஏ 1 பி சித்தியும் ஒரு மாணவன் 8 ஏ 1 சி சித்தியும் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் ஜனாபா எம்.ஏ.எம்.யூ. மாஹிரா தெரிவித்தார்.
-
கட்டாரில் ‘ வாழ்வாதாரம் ஓர் இஸ்லாமியப் பார்வை பாகம்-2 ‘ என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) டோஹா: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
சாம்பியன்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து: 2015 உலக கிண்ணத்துக்கு தயாராகுவோம்: சங்கா, ஜயவர்தன – காலிமுகத்திடலில் விழாக்கோலம்
கொழும்பு: பங்களாதேஷில் நடைபெற்ற தொடரின் இறுதிப்போட்டில் இந்திய அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு மீண்டுமொரு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்த சம்பியன்கள் கோலகலமாக வரவேற்கப்பட்டனர். பங்களாதேஷிலிருந்து இன்று பி.ப. 3.30 மணிக்கு இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இலங்கை அணியினர் வந்தடைந்தனர். விமான ஓடுபாதையில் சம்பியன்களின் விமானம் தரயிறங்கியதும் வரவேற்பின் ஆரம்பகட்டமாக இருமருங்கிலுமிருந்து நோக்கி நீர் பீச்சியடிக்கப்பட்டது.
-
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை ஏற்பாடு செய்த டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபை பல்வேறு டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதன் ஓர் அங்கமாக காத்தான்குடி நகர சபை ஏற்பாடு செய்த டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று 07-04-2014 திங்கட்கிழமை காத்தான்குடி நகர சபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
டி20 ஜாம்பவான்கள் தாயகம் திரும்பினர் – மேள, தாளங்களுடன் கோலாகலமாக வரவேற்பு
கொழும்பு: பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை அணி வீரர்கள் சற்று முன்னர் தாயகம் திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர் திறந்த பஸ் வண்டியொன்றில் ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பழைய வீதியின் ஊடாக மேள, தாளங்களுடன் கோலாகலமாக காலிமுகத்திடலுக்கு அழைத்து வரப்பட்டார்கள்.
-
இன்றைய இலங்கை முஸ்லிம் அரசியல் மனங்கமிழும் சந்தனமா அல்ல சாக்கடையா….??
முஹம்மது காமில் எமது இலங்கைதீவானது உலக வரைபடத்தின் ஆச்சரியங்களில் ஒன்றான நிலப்பரப்பாகும் நாற்புறங்களிலும் கடலால் சூழப்பட்ட இந்துசமூத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் அழகிய தீவாகும். இதன் இயற்கையான அமைவிடத்தின் சிறப்பை இந்த உலகமே அறியும். இங்கு இனம் மதம் மொழியால் வேறு பட்ட சமூக அமைப்புகள் இருந்தாலும் சகல சமூகங்களும் அன்னியோனியமாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
-
அட்டாளைச்சேனை மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவனை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு
பைஷல் எம் இஸ்மாயில், அ.றஹ்மான் அட்டாளைச்சேனை: கடந்த கல்விப்பொதுத் தராதர சாதரன தரப் பரீட்சையில்அட்டாளைச்சேனை தேசிய படசாலையில் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளைப்பெற்று அட்டாளைச்சேனை மண்ணுக்குப் பெருமை சேர்த்த மாணவனை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை அதிபர் வி.ரி.எம்.ஹனீபா மெளலவி தலைமையில் இன்றைய விஷேட ஆராதனை நிகழ்வில் நடைபெற்றது.
-
இலங்கை பொலிஸ் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் -சரியான தகவல் வழங்குபவருக்கு பத்து இலட்சம் வரை சன்மானம் – மட்டக்களப்பில் சுவரொட்டி
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மண்முனை பிரதேசத்தில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
-
‘மரிச்சுக்கட்டியில் இருந்து வெளியேறுமாறு அழுத்தம் கொடுத்தால் தற்கொலை செய்வோம்’-பிரதேச முஸ்லிம்கள்
மன்னார்: மன்னார் மாவட்டம் மரிச்சுக்கட்டி பிரதேசத்தில் வில்பத்து வனப் பகுதிக்கு அருகில் குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பு நாளைய தினம் அங்கு விஜயம் செய்வதாக அதன் நிறைவேற்று செயலாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
-
18 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு மற்றுமொரு உலகக் கிண்ணம்: மகிழ்ச்சியில் உலகம்
காத்தான்குடி: இருபது20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்திருக்கின்றமை இலங்கையரை மாத்திரமன்றி, உலக இரசிகர்களையும் மகிழ்வித்திருக்கின்றமை இலங்கை அணிக்குக் கிடைத்திருக்கும் ஓர் கௌரவமாக அமைகின்றது.
-
மட்டு மாவட்டத்தில் நீதியமைச்சர் றஊப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் 7 புதிய தமிழ் முஸ்லிம் சமாதான நீதிவான்கள் நியமனம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 7 தமிழ் முஸ்லிம் சமாதான நீதிவான்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதியமைச்சர் றஊப் ஹக்கீம் சிபாரிசில் நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த தமிழ் முஸ்லிம் சமாதான நீதவான்களை நியமித்துத்தருமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக நீதி அமைச்சர் றஊப் ஹக்கீம் நியமித்துள்ளார்.
-
திருகோணமலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கக் கூட்டம்
பஹ்மி யூஸூப் திருகோணமலை: இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கக் கூட்டம் கடந்த 06.04.2014ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை திருகோணமலை பட்டினமும் சூழல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்தபுஞ்சி நிலமே தலைமையில் நடைபெற்றது.