க.பொ.த சா-தரப் பரீட்சையில் காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் 9 ஏ நான்கு பேர் – 8 ஏ 1 பி ஆறு பேர் – 8 ஏ 1 சி ஒருவர்

al hira schoolபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2013 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் 9 ஏ சித்தியும் 6 மாணவர்கள் 8 ஏ 1 பி சித்தியும் ஒரு மாணவன் 8 ஏ 1 சி சித்தியும் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் ஜனாபா எம்.ஏ.எம்.யூ. மாஹிரா தெரிவித்தார்.

இதில் முஹம்மது சித்தீக் முஹம்மது முஸ்தகீம்,  அப்துல் அனஸ் அஸீர் அஹமட்,  முஹம்மது அமீனுல்லாஹ் றஸீதுர் றிபாயீ,  முஹம்மது சித்தீக் முஹம்மது உஸைர்  ஆகிய நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தியும்,  முஹம்மது ஸாஹிர் முஹம்மது அப்பாஸி ,  முபாறக் முஹம்மது முபர்ரிஜ்,  முஹம்மது அஜ்வத் முஹம்மது பயாஸ்,  முஹம்மது மர்சூக் முஹம்மது இன்ஸாப்,  முஹம்மது ஜௌபர் அஹமட் ஜஹீர் ஹஸன்,  பறக்கத்துல்லாஹ் அஹமட் ஸஃதி  ஆகிய ஆறு மாணவர்களும் 8 ஏ 1 பி சித்தியும்,  அப்துல் வாஹித் முஹம்மது றஸ்மி  என்ற மாணவன் 8 ஏ 1 சி சித்தியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment