Author: yourkattankudy.com
-
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
KIC காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிருவாகத்தின் கீழ் இயங்கும் தாருத் தௌஹீத் இஸ்லாமிய முன்மாதிரி கலாபீடத்தில் புனித அல்குர்ஆன் கல்வியைப் பூர்த்தி செய்து பரீட்சையில் சித்தியடைந்து வெளியேறும் மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 15.01.2015 அன்று ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நிலையத்தின் தலைவர் எம்.ஐ.கே. முஹம்மத் ஜே.பீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
-
மட்டு – பூநொச்சிமுனை பிரதேசத்தில் 71 வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் பூநொச்சிமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 16-01-2015 இன்று வெள்ளிக்கிழமை பூநொச்சிமுனை இக்றா வித்தியாலத்தில் இடம்பெற்றது.
-
மனித வாழ்வில் இறையச்சம் – ஜும்ஆ பயான்
ஆசிர் உரை : அஷ் ஷெய்ஹ் சயீட் ரமலான் (ரஹ்மானி) இடம் : முஹித்தீன் மெத்தைப் பள்ளிவாயல். காத்தான்குடி – 03. காலம்: 16/01/2015
-
உணர்வு பூர்வமான அரசியலிலிருந்து அறிவு பூர்வமான அரசியலை நோக்கி
டாக்டர் I.L.M. றிபாஸ் காத்தான்குடி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் கண்ணீருக்கும் பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்திருப்பதாக உணரப் படுகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் முஸ்லிம் சமுகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி கேட்பாரற்ற கையறு நிலையினை கடந்த காலங்களில் அனுபவித்தது.
-
ரஷ்யர்கள் இருவரை தலையில் சுட்டு கொலை செய்யும் சிறுவன்! வீடியோ வெளியிட்டது ஐ.எஸ்.
– AF- 90 பக்தாத்: ரஷ்யாவை சேர்ந்த உளவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட இருவரை சிறுவனை விட்டு தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகளை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.ஐஎஸ் தீவிரவாத அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ, காண்போர் நெஞ்சை கலங்கடிப்பதாக உள்ளது.
-
இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கும் 14 அமைச்சர்கள்
கொழும்பு: இன்று வெள்ளிக்கிழமை 14 அமைச்சர்கள் தமது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கின்றனர். இந்தவகையில்,பௌத்த சாசனம், நீதி, ஊடகத்துறை, சுகாதாரம், அரச பாதுகாப்பு, இளைஞர் விவகாரம், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகாரம், துறைமுகம் மற்றும் கப்பல் சேவைகள்,
-
‘கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரே வேண்டும்’: முஸ்லிம் காங்கிரஸ்
திருகோணமலை: இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முதலமைச்சராக தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தவர் ஒருவரே இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் கோரியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.
-
காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் 2015 ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுச்சபைக் கூட்டம்
டீன்பைரூஸ் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை கடாபி பீச் ரெஸ்ட் பிளேசில் முன்னால் தலைவர் எம்.எஸ்.எம். அஸ்ஹர் ஜே.பி. தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற கழகத்தின் பொதுச்சபைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல்போசன நிகழ்வினிலும், கழகத்தின் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
‘முஸ்லிம் சமூகத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை நிகழத்த வேண்டிய கட்டாயம் நமக்கிருக்கின்றது’: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்
NFGG ஊடகப்பிரிவு பாலமுனை: ‘அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களின் நலன்களை மையப்படுத்தியதாகவே மேற்கொள்ளப்படல்வேண்டும். ஆனால், அந்த அரசியல் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு பதிலாக அரசியல் வாதிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கு மாத்திரமே பயன்படுத்தபடுகிறது.
-
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் வசதிகளை கடந்த கால அரசாங்கம் சரியாக செய்து கொடுக்கவில்லை: டி.எம். சுவாமிநாதன்
ஏ.எல்.எம். தாஹிர் கொழும்பு: மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வட கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை கடந்த கால அரசாங்கம் மக்களுக்கு சரியாக செய்து கொடுக்கவில்லை என மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சராக இன்று (15) பதவியேற்ற டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
-
விதைத்ததில் விளைந்தது: வலி – கிழக்குப் பிரதேசம் குறித்த நூல் வெளியீட்டு விழா
இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தூர்: ஊடகவியலாளர் அச்சுவேலியூர் மா. ஞானலிங்கம் எழுதிய விதைத்ததில் விளைந்தது என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
-
புதிய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் கிடைத்துள்ளது
கொழும்பு: பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வ கட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க சார்பு உறுப்பினர்கள் 113 ஆக அதிகரித்துள்ளது.