Author: yourkattankudy.com
-
றிசாத் பதியூதீன் நாளை பதவியேற்பு
– ஏ.எச்.எம். பூமுதீன் கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் புதிய அரசாங்கத்தில் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் றிசாத் பதியூதீன் நாளை வெள்ளிக்கிழமை தமது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
-
ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான விஷேட சந்திப்பு காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடனான விஷேட சந்திப்பொன்று 14-01-2015 நேற்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் பழைய மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
-
உலக கிண்ண போட்டிக்கு முன்னதாக உளவள ஆலோசனை அமர்வில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி
லாஹூர்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் அணியினர் அடுத்த வாரம் லாகூரிலிருந்து நியுசிலாந்து செல்லவுள்ளனர். அதற்கு முன்னர் அவர்கள் நன்கு அறியப்பட்ட விளையாட்டு உளவியலாளர் ஒருவரின் உளவள ஆலோசனை அமர்வில் பங்கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் புதனன்று காலை ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் என்ன..?
மொஸ்கோ: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் புதனன்று காலை ஏற்பட்ட பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’வின் வல்லுநர்கள் அறிய முயன்று வருகிறார்கள். விண்வெளி நிலையத்திலில் உள்ள குளிரவைக்கும் அமைப்பிலிருந்து அம்மோனியா கசிந்ததால் இது நடந்தது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனமான, ராஸ்காஸ்மோஸ் கூறியிருக்கிறது.
-
இராணுவ உதவியுடன் மஹிந்த பதவியைத் தக்கவைக்க முயன்றாரா? பொலிஸ் விசாரணை
கொழும்பு: கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தின் உதவியுடன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டுகள் மீது பொலிசார் விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள்.
-
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் தெரிவித்த கருத்தும் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்ட கேள்வியும் பதிலும் – ஓடியோ ஒலிப்பதிவு
ஒலிப்பதிவு – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 14-01-2014 இன்று புதன்கிழமை காத்தான்குடியிலுள்ள அவரின் காரியாலயத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அவர் தெரிவித்த கருத்தும், ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்ட கேள்வியும் பதிலும் இத்துடன் ஓடியோ வடிவில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
-
அரசாங்கத்தோடு இணையவில்லை – 100 நாள் வேலைத் திட்ட மக்களின் நலன் சார் வேலைத் திட்டங்களை செய்வதற்கும் வரவு செலவு திட்த்திற்கும் மாத்திரம் ஆதரவளிக்கின்றோம் – பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தோடு தான் இணையவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
நான் அதிகார துஸ்பிரயோகம், ஊழல் செய்திருப்பின் அதனை உங்களால் நிரூபிக்க முடியுமா? முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சவால்
டீன் பைரூஸ் காத்தான்குடி: நான் ஊழல் செய்ததாக என்னை குற்றம் சாட்டும் அப்துர் றஹ்மான், சிப்லி பாறூக், முபீன், மர்சூக் போன்றவர்களால் நான் அதிகார துஸ்பிரயோகம், ஊழல் செய்திருப்பதாக பேசி இருக்கின்றீர்களே, அப்படியாயின் அவ்வாற விடயங்களை உங்களால் நிரூபிக்க முடியுமா? உங்களால் முடியாது. ஏனெனின் நாங்கள் மிக தெளிவாக இருக்கின்றோம்.
-
29ம் திகதி பஜ்ஜெட்டை கொண்டுவரும் பொழுது உடனடியாக முதலாவது எனது கையை உயர்தி ஆதரவளிப்பேன் – பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இந்த கட்சியும் இந்த அரசும் தற்போது சத்தியப்பிரமாணம் செய்திருப்பது 96 நாட்களுக்கு மட்டும்தான்’ என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
மைத்திரிபால அரசாங்கத்திற்கு ஹிஸ்புல்லாஹ் ஆதரவு (காணொளி)
– முகம்மட் சஜீ காத்தான்குடி: புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கப்போவதாக முன்னாள் பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
-
“நல்லிணக்கம், மீளிணக்கம் மைத்திரி ஆட்சியில் உதயமாகும்”: முபீன்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நாட்டை பீடித்துப் போயிருந்த அராஜகம் கடந்த ஜனவரி 8ம் திகதி எம்மை விட்டு நீங்கியுள்ளது. தாய் நாட்டு மக்கள் தங்களிடையிலான பேதங்களைத் துறந்து புதிய அரசாங்கத்தை புத்தாண்டில் நிறுவியுள்ளனர் என காங்கிரஸ் கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உலமா கட்சி வாழ்த்து
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நாட்டின் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உலமா கட்சி வாழ்த்து தெரிவித்திருப்பதுடன் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகளால் அவர் வெற்றி பெற்றுள்ளதனால் அம்மக்களின் உரிமைகளை வழங்குவார் என தாம் எதிர் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.