Author: yourkattankudy.com
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டமானது 2014 ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்துள்ளது
கொழும்பு: இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டமானது 2014 ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்துள்ளது. விமான நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 32.4 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2013 மற்றும் 2014 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் ‘டெலன்ட் டேய்’ என்ற பெயரில் விஷேட மாணவ மன்றம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்களினால் நடாத்தப்பட்டு வரும் மாணவ மன்றங்களின் தொடரில் 100வது மாணவர் மன்றம் ‘டெலன்ட் டேய்’ என்ற பெயரில் விஷேட மாணவ மன்றம் 05-03-2015 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி அல்-மனார் அர்ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி தள வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் குறித்து டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் அவர்கள் கவனம் செலுத்துவாரா? – ஒரு அன்பான வேண்டுகோள்
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: சுனாமியால் முற்றாக அழிவடைந்த காத்தான்குடி தள வைத்தியசாலையானது, நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தின் முழுமையான நிதி அனுசரணையில் மிக நவீனமான முறையில் மீளக் கட்யெழுப்பப்பட்டும், கையளிக்கப்பட்டும் பல ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் இன்று வரை இந்த வைத்தியசாலையை நாடிவரும் பொதுமக்களான நோயாளர்களின் வைத்தியத் தேவைகளை முழுமையாகத் தீர்த்து வைக்க முடியாத கையறு நிலையில் காணப்படுவது வேதனைக்கும், விசனத்திற்கும் உரிய விடயமாகும்.
-
‘வெற்றியாளர்கள் யார்’ என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அல்மனார்: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி (05-03-2015) வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தம்!
கொழும்பு: கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
-
தென் கொரிய அமெரிக்கத் தூதர் மீது பிளேட் தாக்குதல்!!
– SHM சியோல்: தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட் மீது ஒரு நபர் பிளேடால் தாக்கியதில், மார்க்கின் முகம், மணிக்கட்டு ஆகிய இடங்களில் வெட்டு வி்ழுந்து ரத்தம் கொட்டியது. பிரிந்து கிடக்கும் வடக்கு மற்றும் தென் கொரிய நாடுகளை இணைக்க வேண்டும் என்று கோஷமிட்டபடி இந்த தாக்குதலை அந்த நபர் ஈடுபட்டார்.
-
குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் 2வது மாபெரும் இரத்ததான முகாம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி-04ம் குறிச்சியில் இயங்கிவரும் குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் 2வது மாபெரும் இரத்ததான முகாம் 05-03-2015 இன்று வியாழக்கிழமை குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
-
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா
– ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்குட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று (05) வியாழக்கிழமை இடம்பெற்றது.
-
உலகை கலக்கும் மரங்கொத்தியின் முதுகில் பயணம் செய்த மரநாய் காட்சி
லண்டன்: ஒரு மரங்கொத்தியின் முதுகில் மரநாய் ஒன்று பயணம் செய்யும் காட்சியை புகைப்படக் கலைஞர் ஒருவர் படமெடுத்துள்ளார். இணையத்தில் இந்தக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
-
நாடு முழுவதும் ஆயிரம் இலவச Wi – Fi இணைப்புகள்
கொழும்பு: நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா நேற்று தெரிவித்தார்.
-
மருந்து விலைகளை விரும்பியபடி அதிகரிக்க முடியாது
கொழும்பு: ஒவ்வொருவரும் தமக்கு விரும்பியபடி மருந்துகளின் விலைகளை நிர்ணயிப்பதற்கு இனிமேலும் அனுமதிக்க முடியாது என சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
அத்தியவசிய மருந்து தட்டுப்பாடுகளுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை!
– ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் நிலப்பரப்பு பகுதியையும், ஏறத்தால 95000 வாக்காளர்களையும் கொண்ட கல்குடா தேர்தல் தொகுதியில் பிரதான வைத்தியசாலையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையே இருந்து வருகின்றது.